Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவங்க பிளானே வேற.." இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொன்ன அந்த ஒரு வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே சண்டை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில், போர் குறித்தும் தனது வருங்கால திட்டம் குறித்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

கடந்த அக். 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியது. ஒரு பக்கம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், மறுபறம் இஸ்ரேலில் புகுந்தும் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றன.

 What is the Israel plan for Gaza explains Israel PM Netanyahu

இந்த தாக்குதலால் முதலில் இஸ்ரேல் ஆட்டம் கண்டாலும் கூட விரைவில் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதலை ஆரம்பித்தது. முதலில் காசா மீது ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், மெல்லப் படையெடுப்பையும் ஆரம்பித்தது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சன்மின் நெதன்யாகு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது இந்த சண்டை ஹமாஸுக்கு எதிரானது என்று குறிப்பிட்ட அவர், இந்த சண்டையை வைத்து காசாவைக் கைப்பற்றவோ, ஆக்கிரமிக்கவோ அல்லது ஆட்சி செய்யவோ இஸ்ரேல் முயலவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் தீவிரவாத அச்சுறுத்தல்களைத் தடுக்க பாலஸ்தீனிய எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ராணுவம் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசா பாதுகாப்புக்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சரியானது இல்லை என்று சமீபத்தில் அமெரிக்கா கூறி இருந்தது. மேலும், இஸ்ரேல் ஹமாஸ் சண்டை முடிந்த பிறகும் கூட, காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் பைடன் கடந்த வாரம் தான் திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதை ஆமோதிக்கும் வகையில் இப்போது இஸ்ரேலும் இந்தக் கருத்துகளைக் கூறியுள்ளது.

நெதன்யாகு பிளான்: இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறுகையில், "நாங்கள் காசாவைக் கைப்பற்ற முயலவில்லை. காசாவை ஆக்கிரமிக்க முற்படவில்லை, காசாவை ஆள வேண்டும் என்பதும் எங்கள் திட்டமில்லை. காசாவில் ஒரு மக்கள் ஆட்சி உருவாக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் திட்டம். அதற்கான நடவடிக்கைகளைத் தான் எடுத்து வருகிறோம். அதேநேரம் கடந்த அக். 7ஆம் தேதி நடந்த தாக்குதலைப் போல மற்றொரு தாக்குதல் நடந்துவிடக் கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் ராணுவத்தில் ஒரு பகுதி தேவைப்பட்டால், காசாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த ரெடியாக இருக்கிறது. இதைச் செய்தால் மட்டுமே ஹமாஸ் படையை முழுமையாக அழிக்க முடியும். ஹமாஸ் மீண்டும் வராமல் தடுக்க இது மட்டுமே ஒரே வழி.. இந்த சண்டைக்குப் பிறகு காசாவை ஆக்கிரமிக்க வேண்டும் என்பது எங்கள் திட்டமில்லை. இப்போது ஹமாஸ் தான் அங்கே வீரர்களைக் குவித்துள்ளனர். அந்த நிலையை மாற்றி, காசாவை மக்கள் வாழக் கூடிய நகராக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்" என்றார்.

போர் நிறுத்தம்: கடந்த அக். 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பிற்கும் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. காசா மக்களுக்கு உதவும் வகையில் போர் நிறுத்தம் வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்திய நிலையில், முதலில் அதை இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும், சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்த நிலையில், வேறு வழியின்றி மக்கள் பாதுகாப்பாக வெளியேறத் தினசரி 4 மணி நேரம் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் சம்மதம் தெரிவித்ததது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+