தொடங்கியது பரிசோதனை.. கொரோனா சிகிச்சைக்கு மேலும் 3 மருந்துகள்.. உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு
3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது
ஜெனீவா: கொரோனா தொற்றை போராடி அழிப்பதில் நோய் எதிர்ப்பு சக்திகள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன.. அந்த வகையில் 3 மருந்துகளை உலக சுகாதார நிறுவனம் சோதனை செய்து வருகிறது.. உலகம் முழுவதும் 600 மருத்துவமனைகளில் ஆய்வக பரிசோதனைகளை ஹூ தொடங்கி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் நிரந்தரமாக கண்டுபிடிக்கப்படவில்லை.. எனவே, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நிறுவனங்களின் தடுப்பூசி மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.
மற்றொருபுறம் கொரோனா தொற்றை குணப்படுத்தும் மருந்தை கண்டறிய உலக சுகாதார நிறுவனம் சார்பில் 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது..

கொரோனா
அந்த வகையில், ரெம்டெசிவிர், ஹைட்ராக்சிகுளோரோகுயின் உள்ளிட்ட 4 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.. ஆனால், அவை பயனற்றவை என்று முடிவு வந்துள்ளன. அதேசமயம், ஏற்கனவே புழக்கத்தில் இருக்கும் சில மருந்துகள் கொரோனா பரவலை தடுக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

மருந்துகள்
அந்த வகையில், வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படும் மேலும் 3 மருந்துகளை அடுத்தகட்ட ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்போவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.. அதாவது அர்டிசுனேட், இமடினிப், இன்பிளிக்சிமேப் ஆகிய மருந்துகளைதான் டெஸ்ட் செய்ய போகிறார்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை இவை தடுக்கும் என்ற நம்பிக்கையில் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த 3 மருந்துகளும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றலை கொண்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.... இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெட்ராஸ் அதானம்,
Recommended Video

சிகிச்சை
"சாலிடாரிட்டி பிளஸ்" என்ற திட்டத்தின் கீழ் 3 மருந்துகள் மீதான ஆய்வக சோதனையை தொடங்கியுள்ளோம்... ஆர்டெஸ்யுனேட் மருந்து மலேரியா சிகிச்சைக்கு தரப்படுவது... அதேபோல இமாட்டினிப் சில வகை புற்று நோய்க்கு வழங்கப்படுவது.. இன்பிளிக்சி-மேப் நோய் எதிர்ப்பு அமைப்பு பாதிப்புக்கு தரப்படும் மருந்துகள் ஆகும். இப்போது உலகம் முழுவதிலும் உள்ள 600 ஆஸ்பத்திரிகளில் இந்த மருந்துகள் மீதான ஆய்வக பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications