நாயுடன் உறவு வைத்து அதன் ஓனரை விஷம் வைத்துக் காலி செய்யப் பா்த்த பெண்!
அல்பக்யூர்க், அமெரிக்கா: அமெரிக்காவில் 53 வயதுப் பெண் ஒருவர் இரு நாய்களுடன் உறவு கொண்டார். பின்னர் அந்த நாய்களின் உரிமையாளருக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்று தற்போது கைதாகியுள்ளார்.
அந்தப் பெண்ணின் பெயர் ஷாரி நைட். இவர் ஸ்பைக் மற்றும் ஜேக் என்ற பெயர் கொண்ட இரு நாய்களுடன் தகாத உறவை மேற்கொண்டார். இந்த இரு நாய்களையும் அவருடைய அறைத் தோழியான பெவர்லி பிராட்லி என்பவர் வளர்த்து வந்தார்.
இந்த வலுக்கட்டாய புணர்ச்சி காரணமாக இரு நாய்களும் காயமடைந்தன. மேலும் ஒரு நாயுடன் தகாத உறவில் ஷாரி ஈடுபட்டிருந்தபோது அதை பெவர்லி பார்த்து விட்டார். இதையடுத்து பெவர்லிக்கும், ஷாரிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த ஷாரி, பெவர்லியையும், அவரது சகோதரரையும் விஷம் வைத்துக் கொல்லத் திட்டமிட்டார்.
இதையடுத்து சகோதர, சகோதரி சாப்பிடும் உணவில் மது, டாய்லெட் கழுவ பயன்படுத்தப்படும் ஆசிட் உள்ளிட்டவற்றை கலந்து விட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பி விட்டனர்.
முன்பு பெவர்லியின் சகோதரருடன் ஷாரிக்குத் தொடர்பு இருந்தது. ஆனால் ஷாரி நாயுடன் உறவு வைத்திருப்பதை அறிந்து அவர் விலகிப் போய் விட்டார். இதனால்தான் ஷாரி கோபமடைந்துள்ளார்.
தற்போது ஷாரி போலீஸ் காவலில் உள்ளார். அவர் மீது பல பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.