நியூசிலாந்து வனவிலங்கு காப்பகத்தில் பயங்கரம்... புலி தாக்கி பெண் ஊழியர் பலி
வெலிங்டன்: நியூசிலாந்தில் வனவிலங்கு காப்பகம் ஒன்றில் புலி தாக்கியதில் பெண் ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் இருந்து சுமார் 520 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள வைக்காட்டோ மாவட்டத்தில் உள்ளது ஹாமில்டன் வனவிலங்கு காப்பகம்.
இங்கு அழிவின் விளிம்பு நிலையில் உள்ள சுமத்ரா புலிகள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இயற்கையான வனச்சூழலில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இந்த காப்பாகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை நேற்று அங்கிருந்த புலி ஒன்று தாக்கியது. இதில், சம்பவ இடத்திலேயே அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தகவலை அம்மாவட்ட போலீஸ் துறையின் செய்தி தொடர்பாளரான ஜூலியட் பர்கெஸ் உறுதி செய்துள்ளார்.
ஆனால், பலியான பெண்ணின் பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை வெளியிட ஹாமில்டன் வனவிலங்கு காப்பக அதிகாரிகள் மறுத்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications