பணியின்போது மின்சாரம் பாய்ந்தது- மின்கம்பத்திலேயே உயிரிந்த வயர்மேன் மோகன்ராஜ்-வாலாஜாபாத்தில் பரிதாபம்!
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் நள்ளிரவில் பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கியதில், மின்கம்பத்தின் உச்சியிலேயே பரிதாபமாக உயிரிழந்ழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் துணை மின் நிலையத்தில் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர், வயர்மேனாக பணியாற்றி வருகின்றார். 46 வயதான மோகன்ராஜிற்கு, காஞ்சனா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அரசு மதுபான கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது சாலை விரிவாக்க பணிக்கு சென்ற ஆர்ஆர் இன்ஃபிரா சொலுஷன் நிறுவனத்தின் கனரக லாரி ஒன்று, எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் சாய்ந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில், மின்வாரிய அலுவலகத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, வயர்மேன் மோகன்ராஜ், மதுபானம் கடை அருகே உள்ள மின் கம்பத்தின் மீது ஏறி, வாலாஜாபாத் மார்க்கமாக சென்ற லயனை மாற்றியுள்ளார். பின்னர், அவளூர் மார்க்கமாக செல்லும் லைனை இயக்க முயன்றுள்ளார். அப்போது மோகன்ராஜ் மீது திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் நிலைகுலைந்த அவர், மின் கம்பத்தின் உச்சியிலேயே மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைகண்டு அதிர்ச்சியுற்ற சக மின் ஊழியர்கள், உடனடியாக வாலாஜாபாத் காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், மின் கம்பத்தில் ஏறி, மின் ஊழியர் மோகன்ராஜின் உடலில் கயிறு கட்டி கீழே இறக்கினர்.

பின்னர் வாலாஜாபாத் காவல் துறையினர் மோகன்ராஜியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நள்ளிரவு பணியின் போது மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி மின்கம்பத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications