இந்தியன் வங்கி.. பளபளன்னு தங்க நகைகள்.. காஞ்சிபுரம் 3 கிளையிலும் நுழைந்த ஆபீசர்ஸ்.. என்ன நடந்தது?
காஞ்சிபுரம்: போலிகளை கண்டு ஏமாற வேண்டாம் என்று போலீசார் தொடர்ந்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தியும்கூட, பல்வேறு இடங்களில் ஏமாந்துவிடுகிறார்கள். அப்படித்தான் காஞ்சிபுரத்திலும் ஒரு மோசடி நடந்துள்ளது.
காஞ்சிபுரம் காரப்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கி, கம்மவார் பாளையம் இந்தியன் வங்கி மற்றும் சங்கரமடம் அருகில் உள்ள இந்தியன் வங்கி ஆகிய 3 வங்கி கிளைகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.

அடமானம்: அப்போது, கடந்த 2023 மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த 3 வங்கி கிளைகளிலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகள் அத்தனையும் போலி என்று கண்டுபிடிக்கப்பட்டது. எல்லா நகைகளுக்கும் தங்கம் மூலாம் பூசி அடமானம் வைத்திருப்பதும் ஆய்வில் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த போலி நகைகளை மோசடி செய்து அடமானம் வைத்தவர்கள் யார் என்ற விபரங்களை சேகரிக்கும் பணி நடந்தது.. இந்தியன் வங்கி சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தந்ததையடுத்து, போலி நகைகளை அடமானம் வைத்தவர்களை பிடித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை: அந்த விசாரணையில், மோசடி செய்வதற்காகவே கவரிங் நகைகளுக்கு தங்கம் மூலம் பூசி நகைகளை தயார் செய்தது உறுதியானது.. இந்த நகைகளை அடமானம் வைத்து, 3 வங்கிகளிலுமே 2 கோடியே 53 லட்சம் மோசடியாக போலி தங்க நகைகள் அடகு வைத்து பெற்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ராணிப்பேட்டையை சேர்ந்த மேகநாதன், பிரகாஷ், சுரேந்தர்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலி நகை மோசடியில் தொடர்புடைய பள்ளுரை சேர்ந்த ராஜேஷ்,சென்னையை சேர்ந்த சரவணன் மற்றும் மேலும் சிலரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இவர்கள் அனைவரும் 3 வங்கி கிளைகளிலும், முலாம் பூசப்பட்ட போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.53 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
3 பேர் கைது: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு வரும்நிலையில், தங்கத்தில் போலி நகைகளை உருவாக்குவதும் நீண்ட காலமாக நடந்து வருகிறது.. அதுவும், ஒரிஜினல் போலவே, போலி தங்கத்தை தயார் செய்கிறார்கள்.. இதில் எது அசல்? எது போலி? என்பது கண்டுபிடிக்கவே முடிவதில்லையாம். அந்த அளவிற்கு தகிடுதத்தம் வேலை நடப்பதாக சொல்கிறார்கள்.
இந்த போலி நகைகள் எப்படி உருவாக்குகிறார்கள் தெரியுமா? முதலில் கவரிங்கில் நகையை செய்துகொண்டு, அதில், தகட்டில் தங்கத்தை கோட்டிங் செய்துவிடுவார்கள்.. இதை பார்த்தால் அச்சுஅசல் தங்கம் போலவே இருப்பதால், ஏமாறுவதும் எளிதாகிவிடுகிறது. எனவே, தங்க நகைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நகை கடைகளில் சென்று உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அவர்களும் அந்த நகையை உரசி பார்த்து, சொல்லிவிடுவார்கள்.
போலி நகைகள்: அதேபோல, ஹால்மார்க் முத்திரை இருந்தாலும்கூட, ஹார்மார்க் சென்ட்டருக்கே சென்று, இதை பற்றி விசாரித்து கொள்ளலாம். அதுமட்டுமல்ல, 916 முத்திரையுடன் நகைகளை வாங்குவது சிறந்தது என்றும் பரிந்துரைக்கிறார்கள். எனவே, உங்களுக்கு நகை வாங்குவதில், விற்பதில் ஏதாவது சந்தேகம் இருந்தால், பாரம்பரிய ஆசாரிகளிடம் அணுகுவது சிறந்தது..!!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications