காஞ்சிபுரம் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பில் நடந்தது என்ன.. வடகலை - தென்கலை வாக்குவாதம் ஏன்?
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை நடந்தது. அந்த நிகழ்வில் பிரபந்தம் பாடுவதில் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்கலை பிரிவினர் முதலில் பாடுவதற்கு வடகலை பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் வந்த பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் பாட அனுமதித்தனர். அதன்பின்னரும் பிரச்சனை செய்தவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.
காஞ்சிபுரம் என்பது கோயில்களின் நகரம் ஆகும். இங்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. இந்துக்களுக்கு வட மாநிலத்தில் புனிதத் தலங்களில் பிரதானமாக காசி (வாரணாசி) இருக்கிறது. அதேபோல் தென்மாநிலங்களில் புனித தலங்களை கொண்ட பிரதான ஊராக காஞ்சிபுரம் இருக்கிறது.. காஞ்சிபுரத்தில் ஏராளமான 8 சிவ தலங்களும், ஏராளமான வைணவ தலங்களும் உள்ளன. காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருக்கச்சி மேற்றளி, திருவோணக்காந்தான் தளி, காரை திருநாதேஸ்வரர், காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில், காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில், அட்டபுயக்கரம் ஆதிகேசவப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம் பவள வண்ணர் கோவில், திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில் உள்பட ஏராளமான கோயில்கள் உள்ளன.

இதில் காஞ்சிபுரத்தில் உள்ள வைணவ தலங்களை பொறுத்தவரை வடகலை தென்கலை பிரிவினரிடையே திவ்ய பிரபந்தம் பாடுவதில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு இன்று உலகெங்கும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டுள்ளது. அப்படித்தான் காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயிலும் ஐந்தாண்டுகளுக்கு பிறகு இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இன்று அதிகாலையில் திறக்கப்பட்ட உடன், அஷ்டபுஜ பெருமாள் பரமபத வாசல் வழியாக வருகை தந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இங்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சொர்க்கவாசல் திறப்பதற்கு முன்பு வடகலை மற்றும் தென்களை பிரிவினர் இடையே யார் முதலில் திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக பிரச்சனையை ஏற்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்த நிலையில், கோவில் நிர்வாகம் சார்பில் வடகலை பிரிவினரை திவ்ய பிரபந்தம் பாட அழைத்ததாக கூறப்படுகிறது.அதேநேரம் தென்கலை பிரிவினர் முதலில் பாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வந்த பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பையும் பாட அனுமதித்தனர். அதன்பின்னரும் பிரச்சனை செய்தவர்களை போலீசார் அங்கிருந்து வெளியேற்றினார்கள்.












Click it and Unblock the Notifications