Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரியில் 1 லட்சம் லஞ்சம்.. நாகர்கோவில் இன்ஸ்பெக்டரை சிக்க வைத்தது யார்.. எப்படி நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் உள்ள நேசமணி நகா் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக அன்பு பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நாகர்கோவிலில் ஒருவரை அடிதடி வழக்கில் இருந்து விடுவிக்க ஒரு லட்சம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் லஞ்சப்பணத்தை கொடுத்து, இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பொறி வைத்து பிடித்துள்ளனர். எப்படி சிக்கினார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

வருவாய்துறை, காவல், சட்டம், நீதி, மின்சாரம், சிறைத்துறை, வேளாண் துறை, பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்து துறை, என தமிழ்நாட்டில் எந்த துறையில் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டாலும், ஆடியோ ஆதாரம் மற்றும் உரிய ஆதாரங்கள் இருந்தால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கலாம். அந்த வகையில் பலர் புகார் அளித்து வருகிறார்கள். அவர்களின் புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் காவல் நிலைய அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளனர்.

Nagercoil police bribe

நாகர்கோவில் நேசமணி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டராக 58 வயதாகும் அன்பு பிரகாஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார். இவர் மீது அண்மையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. அவரது வீட்டில் இருந்து நகை-பணம் இருந்ததாக கூறப்பட்டது. இந்த பிரச்சனை ஒரு புறம் எனில், மீண்டும் லஞ்சம் வாங்கியதால் அவர் நேற்று கையும் களவுமாக சிக்கி வைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடக்கு கோணம் பகுதியை சேர்ந்த 47 வயதாகும் ராஜன் என்ற சந்தை ராஜன் என்பவர் இந்து தமிழர் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். இவர் மீது நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு அடிதடி புகார் வந்தது. இந்த வழக்கில் சந்தை ராஜனின் பெயரை சேர்க்காமல் விடுவிக்க ரூ.3 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ், ராஜனிடம் கூறினாராம். இதையடுத்து ராஜனும் ரூ.1.85 லட்சத்தை அன்பு பிரகாஷிடம் கொடுத்தாராம்.

பின்னர் மீதமுள்ள லஞ்ச பணத்தையும் கேட்டு இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் அவரை மிரட்டியதாக புகார் எழுந்தது. ஆனால் மேலும் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜன் இதுபற்றி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்திருக்கிறார். பிறகு போலீசாரின் அறிவுரை படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகள் ரூ.1.15 லட்சத்தை நேற்று ஆரல்வாய்மொழியில் உள்ள இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் வீட்டில் வைத்து அவரிடம் ராஜன் கொடுத்தாராம்.

லஞ்ச பணத்தை இன்ஸ்பெக்டர் பெற்றுக் கொண்ட போது அங்கு மறைந்திருந்த நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தலைமையில் போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். இதையடுத்து போலீசார் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாசை கைது செய்தனர். லஞ்சம் வாங்கி கைதான அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்பட உள்ளதாக உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கட்சி நிர்வாகியிடம் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+