Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெள்ளிக்கிழமை பண்ணை வீட்டில் "படுக்கை பகிர்வு" + பார்ட்டி.. கஞ்சா காதலியின் பகீர்.. சிக்கியது எப்படி

குளச்சல் பங்களாவின் மொட்டை மாடியில் நடந்த பர்த்டே பார்ட்டி குறித்த விசாரணை நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: குளச்சல் பகுதியில் மதுவிருந்து பார்ட்டி நடத்தப்பட்டதும், அதில் ஏராளமான இளம்பெண்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு, பாலியல் அட்டகாசம் செய்ததாகவும் செய்திகள் வந்த நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த மாணவர் பெயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயதுகூட இன்னும் இவருக்கு முடியவில்லை.

குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர்கள் 2 பேருமே ஒன்றாக ஸ்கூலில் படித்தவர்கள்.. அப்போதிருந்தே இருவருமே காதலித்து வந்துள்ளனர்..

 பைக் நண்பர்கள்

பைக் நண்பர்கள்

ஸ்கூல் முடிந்து காலேஜ் சென்ற நிலையிலும் 6 வருடமாக இந்த காதல் தொடர்ந்தது.. ஆனால், ரம்யாவின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.. நிறைய ஆண் நண்பர்களுடன் சுற்றி வந்த நிலையில், விக்ரமுக்கு இது மிகுந்த மனஉளைச்சலை தந்து வந்துள்ளது.. ரம்யாவை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இந்த சமயத்தில்தான், ரம்யா தன் பிறந்தநாளுக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி தருவதாக, விக்ரமுக்கு தகவல் கிடைத்தது.. அங்கு சென்று பார்த்தால், ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அனைவருமே அரைகுறை ஆடையில், மதுபோதையில் நடனமாடி கொண்டிருந்துள்ளனர்.

ஆணுறை

ஆணுறை

இதை பார்த்து ஆத்திரம் அடைந்த விக்ரம், ரம்யாவை அங்கேயே தாக்கி உள்ளார்.. இதற்கு பிறகு, ரம்யாவின் பெற்றோர் போலீசில் சொல்லவும், பர்த்டே பார்ட்டி நடந்த சம்பந்தப்பட்ட பங்களாவுக்கு சென்று பார்த்தபோதுதான், கிழித்து வீசப்பட்ட டிரஸ்கள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், ஸ்நேக்ஸ், ஆணுறைகள், என சிதறிக்கிடந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.. இதற்கு பிறகு விசாரணை நடத்தியபோதுதான், பாலியல் அட்டூழியங்கள் அங்கு அரங்கேறியிருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

 தென்னை மரம்

தென்னை மரம்

இந்நிலையில், போலீசாருக்கு இந்த தகவல்கள் எப்படி கிடைத்தன? ரம்யா ஏன், விக்ரமை திடீரென கழட்டிவிட்டார் என்பன போன்ற கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. பார்ட்டி நடப்பதை கேள்விப்பட்டு, அந்த பங்களாவை தேடி விக்ரம் சென்றுள்ளார். ஆனால், அந்த பங்களா கேட் உள்பக்கமாக அடைக்கப்பட்டிருந்ததால், அவரால் உள்ளே செல்ல முடியவில்லை. அதனால், அந்த வீட்டின் முன்பக்கம் இருந்த மரங்களை பிடித்துஏறி சென்று, பங்களாவுக்குள் நுழைந்துள்ளார்..

பங்களா

பங்களா

இந்த பங்களா, குளச்சலில் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ளதாக தெரிகிறது.. இது ரம்யாவின் பெரியப்பாவுக்கு சொந்தமான பங்களாவாம்.. பண்ணை வீடு என்பதால், எப்போதாவது இங்கு வந்து செல்வதாக கூறுகிறார்கள். ஆனால், யாரும் அந்த பங்களாவில் தற்போது வசிக்கவில்லை என்கிறார்கள். மதுவிருந்து வெள்ளிக்கிழமை இரவு நடந்துள்ளது.. விருந்துக்கு, ரம்யாவின் ஆண் நண்பர்கள் ஆகாஷ், மணிகண்டன், கல்லூரி தோழிகள் 2 பேர் உட்பட சிலர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பார்ட்டி நடப்பதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த விக்ரம், ரம்யாவின் கன்னத்தில அறைந்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல், கீழே கிடந்த கம்பை எடுத்து, ரம்யாவின் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்..

 வண்டவாளம்

வண்டவாளம்

அதோடு அங்கிருந்த ஆண் நண்பர்களையும், கம்பை வைத்து விரட்டி அடித்துள்ளார். ரம்யாவின் மண்டையில் ரத்தம் கொட்டி படுகாயம் ஏற்பட்டதையடுத்து, அவரை அவரது பெற்றோர் மருத்துவமனையில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.. இதற்கு பிறகு, நடந்த சம்பவங்களை, ரம்யாதான் போலீசிற்கு புகாராக தந்துள்ளார்.. போலீசார் விக்ரமை விசாரிப்பார்கள் என்றுதான் ரம்யா தரப்பில் நம்பப்பட்டது.. ஆனால், ரம்யாவின் வண்டவாளமே வெளியாகும் என்று யாருக்கும் தெரியவில்லை.. போலீசார் மொத்த விவரங்களையும் சேகரித்து விட்டனர்..

"ஜாய்ன்ட்"

இரவு நேரங்களில், விக்ரமுக்கு தெரியாமல், இந்த பங்களா வீட்டிற்கு, ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து தந்து வந்துள்ளாராம் ரம்யா.. அதுமட்டுமல்ல, "ஜாய்ன்ட் அடித்தல்" என்ற சங்கேத வார்த்தையையும் இந்த நண்பர்கள் அனைவருமே பயன்படுத்தி வந்துள்ளனர்.. இதில் ரம்யா, சில வருடங்களாகவே, கஞ்சா பழக்கத்திற்கும் ஆளாகி வந்துள்ளார்.. இந்த பார்ட்டிக்கு ஆண் + பெண் தோழிகளை அழைக்கும் ரம்யா, போதை தலைக்கேறிய நிலையில், ஆண் நண்பர்களுடன் சந்தோஷமாக இருந்துள்ளார்..

வார்னிங்

வார்னிங்

அத்துடன், தன்னுடைய தோழிகளையே மதுவுக்கு அடிமையாக்கி அவர்களை, தன்னுடைய ஆண் நண்பர்களுக்கும் விருந்தாக்கியதாக கூறப்படுகிறது. இதைதான் விக்ரம் கண்டுபிடித்து, ரம்யாவை எச்சரித்துள்ளார்.. தொடர்ந்து விக்ரம் கண்டித்து கொண்டே இருந்ததால், அவரை கழட்டிவிடவும் துணிந்து, காதலை பிரேக் அப் செய்துள்ளார்... பிரேக் அப் ஆன பிறகுதான், இந்த விருந்து நடந்துள்ளது..

 படுக்கை பகிர்வு

படுக்கை பகிர்வு

அப்போதும் காதலியின் செயலை பார்த்து ஆவேசமாகி, மரக்கட்டையை எடுத்து, அனைவரையும் விரட்டி தாக்கி உள்ளார் விக்ரம்.. இதனால் அனைவரும் அலறியடித்து கொண்டு ஓடவும், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர்.. ஆனால், அதற்குள் விக்ரம் தப்பித்து ஓடிவிட்டார்.. இப்போது விக்ரமை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட ஆண் நண்பர்கள் யார்? பெண் தோழிகள் யார்? தன்னுடைய தோழிகள் எத்தனை பேரை, ஆண் நண்பருக்கு ரம்யா விருந்தாக்கி உள்ளார்? என்ற விசாரணைகளில் இறங்கி உள்ளனர்.

ஆடியோ லீக்

ஆடியோ லீக்

இதனிடையே, விக்ரமின் தாயார், ரம்யாவால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், தன்னுடைய மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என்றும் கூறிவருகிறார். இதைக்கேட்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் கதிகலங்கி உள்ளனராம்.. அதில் ஒரு மாணவி, விக்ரமின் அம்மாவுக்கு போனை போட்டு அழுதுள்ளார்.. அந்த வாய்ஸ் மெசேஜ் ஆடியோவும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கதறி அழுத பெண்

கதறி அழுத பெண்

அதில், "நான் மதுவுக்கு ஆசைப்பட்டு ஒரு நாள்தான் அங்கு சென்றேன்... உணர்ச்சிவசப்பட்டு தவறு செய்துவிட்டேன்... அதற்கு பிறகு அவர்கள் அழைத்தார்கள்... நான் போகவில்லை" என்று அந்த ஆடியோவில் கதறி அழுதுள்ளாராம்.. இந்த ஆடியோவை போலீசாரிடம் தந்துள்ளார் விக்ரமின் தாய்.. மேலும், இளம்பெண்களுக்கு மெசேஜ்மூலம் அழைப்பு விடுக்கும் அந்த கும்பல் பற்றியும் போலீசாரின் கவனத்துக்கு சென்றுள்ளது.. மெசேஜ் மூலம் அழைப்பு விடுக்கும் அந்த கும்பல் யார்? எங்கிருந்து இவர்கள் செயல்படுகிறார்கள்? இதற்கு தலைமை யார்? என்ற விசாரணைகள் துரிதமாகி உள்ளதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+