ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் தமிழகம் திரும்பினர்.. ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
கன்னியாகுமரி: கொரோனா தொற்று காரணமாக ஈரானில் சிக்கித் தவித்த 40 மீனவர்கள் நேற்று தமிழகத்திற்குத் திரும்பினர். இந்த தகவலை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
ஈரானில் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் பணியாற்றி வந்தனர். கொரோனா வைரஸால் லாக்டவுன்அறிவிக்கப்பட்டதால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். ஈரானில் சிக்கி பல மாதங்களாக தவித்து வந்த நிலையில் அவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் ஈரானில் சிக்கித் தவித்த 40 இந்திய மீனவர்கள் (Fishermen) ஏர் இந்தியா விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்பட்டனர்.. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், துத்துகுடி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அவர்கள் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
முன்னதாக ஈரானில் சிக்கித் தவித்த மொத்தம் 681 இந்திய மீனவர்கள் ஜூலை 1 ம் தேதி அன்று இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஜலாஷ்வாவால் மூலம் பாதுகாப்பாக தமிழகத்திற்கு திரும்பி அழைத்து வரப்பபட்டனர் .
-
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
எங்க நிபந்தனையை ஏற்றால்தான் போர் நிறுத்தம்.. அமெரிக்கா திட்டத்தை நிராகரித்த ஈரான்! தீவிரமாகும் போர் -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க 20,000 கி.மீ தூரத்திலிருந்து உதவும் இந்திய நட்பு நாடு! -
ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி -
ட்ரம்ப் சொல்லி வாயை கூட மூடல..ஈரானில் விழுந்த ஏவுகணைகள்! பற்றி எரிந்த எல்பிஐ மையம்..மீண்டும் சிக்கல் -
ஈரான் போரால்.. எமெர்ஜென்சியை அறிவித்த ஆசிய நாடு! அடுத்து இந்தியாதான்! எச்சரிக்கும் நிபுணர்கள் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications