Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒட்டுத்துணி இல்லாம.. சிக்கிய குமரி பாதிரியார்! தோண்ட தோண்ட ஆபாசம் - வழக்குப்பதிவு செய்த குமரி போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை மயக்கி ஆபாசமாக வீடியோகால் பேசி பணம் கேட்டு மிரட்டிய பாதிரியார் பெனெடிக் ஆண்டோ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்கள்.

கன்னியாகுமரி தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த வாரம் அவரை தாக்கிய மர்ம நபர்கள் லேப்டாப்பை திருடிவிட்டு சென்றனர்.

இந்த நிலையில் அந்த லேப்டாப்பில் இருந்த பல அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

 பெண்களுடன் பேச்சு

பெண்களுடன் பேச்சு

இவர் தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பேசி அவர்களின் செல்போன் எண்களை வாங்கி தொடர்ந்து பேசி வந்து இருக்கிறார். அதன் பின்னர் வாட்ஸ் ஆப் மூலமாக அவர்கள் பேசத் தொடங்கிய அவர், பெண்களிடம் நாளாக நாளாக ஆபாசமாக பேச தொடங்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக வீடியோ கால் மூலமாக பெண்களிடம் பேசி இருக்கிறார் பெனெடிக் ஆண்டோ.

கல்லூரி மாணவிகளுக்கு குறி

கல்லூரி மாணவிகளுக்கு குறி

பெரும்பாலும் இவர் அதிகம் பேசுவது கல்லூரி மாணவிகள்தான் என்கிறார்கள். அவரது பேச்சு மயங்கி சில பெண்களிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசி அதை ரெக்கார்ட் செய்தும் வைத்து இருந்துள்ளார் ஆண்டோ. அதேபோல் நேரிலும் பெண்களிடம் பாதிரியார் தவறாக நடந்துகொண்டதாகவும், ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களை காட்டி பணம் கேட்பதாகவும் புகார்கள் எழுந்தன.

நர்சிங் மாணவி புகார்

நர்சிங் மாணவி புகார்

இதற்கு அஞ்சிய பெண்கள் அவர் கேட்ட பணத்தை கொடுத்து ஏமாற்றப்பட்டும் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு நர்சிங் மாணவி பாதிரியார் பென்னடிக் ஆண்டோ மீது பாலியல் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார். அந்த புகாரை பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே ஆபாச வீடியோக்கள் கசிந்ததால் அவர் தலைமறைவானார்.

புதிய மதபோதகர்

புதிய மதபோதகர்

பாதிரியாராக பணிபுரிந்து வந்த தேவாலயத்தில் இருந்தும் பென்னடிக் ராஜினாமா செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு மாற்றாக புதிய மதபோதகர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கிடையே வெளியான ஆபாச வீடியோக்களில் இடம்பெற்ற பாதிரியாரால் ஏமாற்றப்பட்ட பெண்களை போலீசார் விசாரிக்க முடிவு செய்து இருந்தனர்.

 வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

பாதிக்கப்பட்ட பெண்கள் தாமாக முன்வந்து தங்களின் விபரங்களை வழங்க வேண்டும் எனவும் அவர்களின் ரகசியத்தை காப்பதாகவும் போலீசார் அறிவுறுத்தினர். இந்த நிலையில்தான், 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆண்டோ மீது நாகர்கோயில் சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+