எடத்துவா தேவாலயத்தில் கோலாகல திருவிழா.. செங்கல் சுமந்து நூதன முறையில் நேர்த்தி கடன்
Recommended Video
கன்னியாகுமரி: கேரள மாநிலம் ஆலப்புழையில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த எடத்துவா தேவாலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் செங்கல் சுமந்து நூதன முறையில் நேர்த்தி கடன் செலுத்தினர்.
இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தேவாயலத்தில், 17 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் கேரள மக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் தென்மாவட்ட மக்களும் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் மலையாள மொழியில் திருப்பலி நடைபெறுவது போல் தமிழிலும் திருப்பலி நடைபெறுகிறது.

மொழி பாகுபாடின்றி மலையாள மக்களுக்கு நிகராக தமிழக மக்களுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இங்கு வழிபடச் செல்லும் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி இந்துக்களும் செங்கல் சுமந்து நேர்த்தி கடன் செலுத்தும் நூதன முறையை நீண்ட காலமாக கையாண்டு வருகின்றனர்.

தங்கள் குடும்ப இன்னல்களை போக்கவும் திட்டமிட்ட பணிகள் இடையூறின்றி நிறைவேறவும் நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் தேவாலயத்தின் முன்பிருந்து தங்களால் சுமந்து செல்லும் எடைக்கேற்ப செங்கற்களை தலையில் ஏந்தி பிரார்த்தனை செய்த வண்ணம் தேவாலயத்தை சுற்றி வருகின்றனர்.

இந்த நூதன நேர்த்தி கடனில் சிறியோர், பெரியோர் வயது வித்தியாசமின்றி குடும்பத்துடன் பங்கேற்று வருவது வித்தியாசமான நிகழ்வாக அமைந்துள்ளது. இங்கு தென் தமிழகத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபட சென்று வருகின்றனர். வண்ண, வண்ண அலங்காரங்களால் இரவு நேரத்தில், பழமை வாய்ந்த எடத்துவா தேவாலயம் ஜொலிக்கிறது. பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக உள்ளது.


-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications