கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி லாக்கரை திறந்ததுமே அலறிய அரசு அதிகாரி.. ரூ.2.65 கோடி பின்னணியில் 7 பேர்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள அந்தக் கூட்டுறவு வங்கியில், அதிகாரிகள் லாக்கரை திறந்து நகைகளை சரிபார்த்தபோதுதான், அந்த அதிர்ச்சி காத்திருந்தது. மொத்தம் எவ்வளவு கோடி ரூபாய் வரை இந்த மர்ம தில்லுமுல்லு நடந்துள்ளது தெரியுமா? அதிகாரிகளை உறைய வைத்த அந்தத் தொகையின் பின்னணியில் வங்கியின் எழுத்தர் முத்துகிருஷ்ணன் உட்பட 7 பேர் கொண்ட ஒரு பெரிய கும்பலே பின்னணியில் இருந்ததுதான் இப்போது தமிழக கூட்டுறவுத் துறையையே அதிர வைத்துள்ளது!
பொதுவாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் தங்களது அவசர தேவைகளுக்காகவும், விவசாயத் தேவைகளுக்காகவும் நம்பியிருப்பது உள்ளூர் கூட்டுறவு வங்கிகளைத்தான்.

கன்னியாகுமரி கூட்டுறவு வங்கி
இதுபோன்ற வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியில் தங்க நகை அடமானக் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியிலும் தினந்தோறும் ஏகப்பட்ட பொதுமக்கள் வந்து தங்களது நகைகளை அடகு வைத்து கடன் பெற்று சென்றுள்ளனர். இந்த நிலையில்தான், வங்கியின் வழக்கமான செயல்பாடுகள் மற்றும் கணக்கு வழக்குகளில் ஏதோ குளறுபடி இருப்பதாக உயர் அதிகாரிகளுக்கு சீக்ரெட்டாக மெசேஜ் ஒன்று போயுள்ளது.
இதனால் அதிர்ந்து போன கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கியில் திடீரென அதிரடி தணிக்கை அதாவது Audit மேற்கொண்டனர். வங்கியின் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகளை ஆய்வு செய்தபோது, அதிகாரிகள் மொத்த பேருமே ஷாக் ஆனார்கள்..
வங்கியில் ரூ.2.65 கோடி நகைகள்
காரணம், வங்கியில் வைக்கப்பட்டிருந்த நகைகளில் பெரும்பாலானவை போலித் தங்க நகைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியின் ஊழியர்களே உள்ளே இருந்து கொண்டு, போலி நகைகளை அசல் நகைகள் போலக் காட்டி, தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களில் பல கோடிகளைச் சுருட்டியுள்ளதும் இந்த ஆடிட்டிங்கில் வெளிச்சத்திற்கு வந்தது. மொத்தம் ரூ.2.65 கோடி வரை இந்த இமாலய தில்லுமுல்லு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் முருகேசன், இந்த மெகா மோசடி குறித்து நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் ஒன்றை தந்தார்.. கூட்டுறவுத் துறை அளித்த இந்த புகாரை தொடர்ந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்தனர்.. அதே வேகத்தில் தங்களது அதிரடி விசாரணையையும் களத்தில் இறக்கினார்கள்.
லாக்கரில் நடந்த அதிர்ச்சி
காவல்துறையின் இந்த முதற்கட்ட விசாரணையில் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது இந்த மோசடிக்கு வங்கியின் உள்ளே இருக்கும் ஊழியர்களும், வங்கியின் சில முக்கிய உறுப்பினர்களும் உடந்தையாக இருந்துள்ளார்களாம்.. அவர்களுடன் கூட்டு சேர்ந்து திட்டமிட்டு செயல்பட்டது தெரியவந்தது.
இந்த பெரும் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 7 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முதற்கட்டமாக வழக்குப் பதிவு செய்தனர்.
அலறிய அரசு அதிகாரிகள்
வழக்குப் பதிவு செய்யப்பட்ட உடனே அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார், இந்த மோசடியில் நேரடியாகத் தொடர்புடைய வங்கியின் எழுத்தர் முத்துகிருஷ்ணன் என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். கைதான முத்துகிருஷ்ணனிடம் போலீசார் தங்களது பாணியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 6 முக்கிய நபர்கள் போலீஸ் நடவடிக்கைக்குப் பயந்து தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த 6 பேரையும் சல்லடை போட்டுத் தேடிப் பிடிப்பதற்காகக் குற்றப்பிரிவு போலீசாரால் உடனடியாகத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் பல்வேறு இடங்களுக்குச் சென்று குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எழுத்தர் சிக்கினார்
இதற்கு நடுவில், இந்த மோசடி பணமெல்லாம் எங்கே போனது என்பது குறித்த விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த கூட்டுறவு வங்கியின் செயலாளர் மற்றும் கைதான எழுத்தர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோரின் சொத்துக்களைக் கணக்கெடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
மக்களின் வரிப்பணத்தையும், வங்கியின் பணத்தையும் மோசடி செய்து, அந்தப் பணத்தைக் கொண்டு இவர்கள் ஏதாவது சொத்துக்களை இவர்கள் வாங்கி போட்டுள்ளார்களா? அல்லது பினாமி பெயர்களில் நிலம், வீடுகளை வாங்குவதில் முதலீடு செய்துள்ளார்களா? என்பது குறித்துப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்துக்கள் எங்கே
இந்த விசாரணையின் முழுமையான முடிவில்தான், இவர்கள் எங்கெங்கே சொத்துக்களை வாங்கியுள்ளனர், இந்த மோசடிப் பணத்தை எப்படியெல்லாம் கையாடல் செய்துள்ளனர், இந்த கும்பலின் பின்னணியில் இன்னும் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்ற முழுமையான விவரங்கள் வெளிவரும் என்று குற்றப்பிரிவு போலீசார் அதிகாரப்பூர்வமாகத் தகவல் தெரிவித்துள்ளனர்.
பாடுபட்டு உழைத்து, மாத சம்பளம் போதாமல், குடும்பத்தை சுமக்க முடியாமல் எத்தனையோ ஊழியர்கள் அவஸ்தை பட்டு வருகிறார்கள்.. ஆனால், கோடிக்கணக்கில் மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!!!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications