கன்னியாகுமரி திற்பரப்பில் 500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை அகற்ற முயற்சி.. இந்து முன்னணி எதிர்ப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சாமூண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பெரிய மரத்தை முறிக்க தனிநபர் முயற்சி செய்யதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு குருவி காலை பகுதியில் பல தலைமுறைளுக்கு முன்பு இருந்த ஒரு சிறிய கோயில பல ஆண்டுகளாக ஊர் மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் சார்பில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கோவிலின் அருகே மிக உயரமான இரண்டு மரங்கள் உள்ளன இந்த நிலையில் தனி நபரான அந்த பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இந்த கோவில் நிலத்தை தனது எனக் கூறி உரிமை கொண்டாடியதாக தெரிகிறது. இவர் போலியாக உரிமை கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கமிட்டி சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென தனிநபர் கேட்ட வேண்டுகோளை ஏற்று அங்கு நிற்கும் பெரிய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊது மரமான பச்சை மரத்தை வெட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் உள்ள பெரிய பச்சை மரத்தை வெட்ட தனி நபருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வந்தனர்.
பச்சை மரத்தை வெட்ட அனுமதி இல்லை என்கின்ற நிலை இருக்கும் நிலையில் காவல்துறையினர் தனிநபர் மரம் வெட்டுவதற்காக பாதுகாப்பு பணிக்கு இந்தப் பகுதிக்கு வந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும்
பக்தர்களை அதிர்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அந்த கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து வந்த பகுதி அவர்கள் முகமிட்டு வருகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனி நபருக்குக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications