கன்னியாகுமரி திற்பரப்பில் 500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை அகற்ற முயற்சி.. இந்து முன்னணி எதிர்ப்பு
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சாமூண்டேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பெரிய மரத்தை முறிக்க தனிநபர் முயற்சி செய்யதாக புகார் எழுந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு குருவி காலை பகுதியில் பல தலைமுறைளுக்கு முன்பு இருந்த ஒரு சிறிய கோயில பல ஆண்டுகளாக ஊர் மக்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஊர் மக்கள் சார்பில் சிறிய அளவில் கோயில் கட்டி வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கோவிலின் அருகே மிக உயரமான இரண்டு மரங்கள் உள்ளன இந்த நிலையில் தனி நபரான அந்த பகுதியை சேர்ந்த ஜெகன் என்ற நபர் இந்த கோவில் நிலத்தை தனது எனக் கூறி உரிமை கொண்டாடியதாக தெரிகிறது. இவர் போலியாக உரிமை கோருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கமிட்டி சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று திடீரென தனிநபர் கேட்ட வேண்டுகோளை ஏற்று அங்கு நிற்கும் பெரிய 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊது மரமான பச்சை மரத்தை வெட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக வந்துள்ளனர். காலங்காலமாக பொதுமக்கள் வழிபட்டு வந்த இந்த ஆலயத்தில் உள்ள பெரிய பச்சை மரத்தை வெட்ட தனி நபருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்க வந்தனர்.
பச்சை மரத்தை வெட்ட அனுமதி இல்லை என்கின்ற நிலை இருக்கும் நிலையில் காவல்துறையினர் தனிநபர் மரம் வெட்டுவதற்காக பாதுகாப்பு பணிக்கு இந்தப் பகுதிக்கு வந்த சம்பவம் இந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும்
பக்தர்களை அதிர்சிக்கு உள்ளாக்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பக்தர்கள் அந்த கோயில் வளாகத்தில் குவிந்தனர். தொடர்ந்து வந்த பகுதி அவர்கள் முகமிட்டு வருகின்றனர். அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு தனி நபருக்குக்கு ஆதரவாகச் சட்டத்தை மீறி செயல்படும் அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications