SIR.. வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை நாளைக்குள் தர வேண்டும்.. கன்னியாகுமரி கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் பூர்த்தி செய்த கணக்கீட்டு படிவங்களை நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வழங்க வேண்டும் என்று கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிக்காக அடுத்த மாதம் முதல் படிவங்கள் வழங்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்தம் (SAR) என்பது, எந்த ஒரு வாக்காளரையும் நீக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட திட்டம் இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் வழங்குவது மற்றும் கள ஆய்வு செய்யும் பணியில் 90 சதவீதத்தைக் கடந்து விட்டனர். ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களும் வீட்டிற்கே சென்று விண்ணப்பப்படிவங்களை வழங்கினார்கள். இந்த படிவங்களை நாளைக்குள் வழங்க வேண்டும் என்று கன்னியாகுமரி கலெக்டர் அறிவித்துள்ளார்.

Kanyakumari District Voters Must Submit Completed Enumeration Forms by Tomorrow says Collector

இதுதொடர்பாக கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 92 ஆயிரத்து 872 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 817 கணக்கீட்டு படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வழங்கப்பட்டுள்ளது. இது மொத்த வாக்காளர் கணக்கீட்டு பட்டியலில் 97.49 சதவீதம் ஆகும். இதைத் தொடர்ந்து படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிய 11 லட்சத்து 92 ஆயிரத்து 514 வாக்காளர்களின் பெயர்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாகர்கோவில் சட்டசபை தொகுதிக்குட்பட்ட நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் பணி நிமித்தம் காரணமாக வெளியூர்கள், வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதால் கணக்கீட்டு படிவங்கள் வழங்குவதில் சிரமங்கள் உள்ளன.

சுனாமி பேரிடர் மற்றும் திருமணமாகி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்த வாக்காளர்களை கண்டறிந்து வரைவு வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இடம்பெற அந்தந்த கிராமங்களில் உள்ள அமைப்புகளின் மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி துரிதமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை வடமாநிலங்களை சேர்ந்த எந்தவொரு வாக்காளர்களும் குமரி மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை.

புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்கும் பணிக்காக அடுத்த மாதம் முதல் படிவங்கள் வழங்கப்படும். மாநகராட்சிக்குட்பட்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை மாநகராட்சி அலுவலகத்திலும் ஒப்படைக்கலாம். நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் நாளைக்குள் (வெள்ளிக்கிழமை) வழங்க வேண்டும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+