கன்னியாகுமரியில் புது வீடு கட்ட ஆசைப்பட்ட சென்னை ஐடி ஊழியர்.. அரசு ஊழியருக்கு மறக்க முடியாத ட்விஸ்ட்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள ஏற்றக்கோடு மணலித்தறைவிளை பகுதியை சேர்ந்த சுபின் என்பவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சுபின் புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதிக்காக ஆற்றூர் பேரூராட்சி அலுவலக வரி வசூலிப்பாளர் முருகனை சந்தித்துள்ளார். அப்போது முருகன் வரைபட சான்று வழங்காமல் தொடர்ந்து சுபினை அலைக்கழித்தாராம். இறுதியில் சென்னை ஐடி ஊழியர் கற்றுக்கொடுத்த பாடத்தை முருகனால் மறக்கவே முடியாததாக மாறியது. என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கினால் அவர்கள் மீது புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வைக்க முடியும். அந்த வகையில் கன்னியாகுமரியில் ஒரு அரசு ஊழியர் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக சிக்கி கைதாகி உள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் அருகே உள்ள ஏற்றக்கோடு மணலித்தறைவிளை பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருடைய மகன் சுபினுக்கு 25 வயது ஆகிறது. சுபின் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

புதிதாக வீடு கட்ட அனுமதி
சென்னை ஐடி ஊழியரான சுபின் புதிதாக வீடு கட்ட வரைபட அனுமதிக்காக கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சி அலுவலக வரி வசூலிப்பாளர் முருகனை (59) சந்தித்திருக்கிறார். அப்போது அவர் வரைபட சான்று வழங்காமல் தொடர்ந்து சுபினை அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் வரைபட சான்று தருவதாக கூறியிருந்தாராம். இதனை கேட்ட சுபின், பணத்தை தயார் செய்து விரைவில் வருவதாக கூறி விட்டு சென்றாராம்.
லஞ்சம் கேட்ட அதிகாரி
ஆனால் லஞ்சம் கொடுக்க மனமில்லாத சுபின் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அப்போது ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் நோட்டுகளை கொடுத்து, அந்த பணத்தை சம்பந்தப்பட்டவரிடம் சென்று கொடுங்கள் என போலீசார் தெரிவித்தார்கள். அதன்படி பணத்துடன் ஐடி ஊழியர் சுபின் கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூர் பேரூராட்சி அலுவலகத்துக்கு நேற்று சென்றுள்ளார். அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்தனர்.
சிக்கிய முருகன்
திட்டமிட்டப்படி பணத்தை வரி வசூலிப்பாளர் முருகனிடம் கொடுத்தார். உடனே முருகனும் புன்முறுவலுடன் பெற்றுக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி சால்வன்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சிவசங்கரி, ரெமா மற்றும் போலீசார் அதிரடியாக நுழைந்து கையும், களவுமாக வரி வசூலிப்பாளர் முருகனை மடக்கி கைது செய்தனர்.
வழக்கு பதிவு
தொடர்ந்து அவரிடம் கணக்கில் வராத பணம் வைத்திருக்கிறாரா? என லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனை நிறைவு பெற்றதும் லஞ்ச பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். கட்டிட வரைபட அனுமதிக்காக ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வரி வசூலிப்பாளர் முருகன் கைது செய்யப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications