கன்னியாகுமரியில் நாகர்கோவில் சுசீலா செய்த நம்ப முடியாத வேலை.. தங்கச்சியுடன் சிக்கி ஒரே அசிங்கம்
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் குருகுலம்சாலையை சேர்ந்தவர் பகவத் என்பவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் தயாருக்கு உடல் நிலை சரியில்லை.. இதனால் அவர் வீட்டில் அவரை பராமரிக்க சுசீலா என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்துள்ளார். இந்த சுசீலா செய்த காரியத்தை பார்த்து டாக்டர் ஆடிப்போனார். அவரது தங்கையும் உடந்தையாக இருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
வீட்டு வேலை செய்யும் பலர் நேர்மையானவர்களே இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் தவறான செயல்களில் ஈடுபட்டு தங்க நகைகள் மற்றும் பணம் திருடுவது நடக்கிறது. அப்படியான ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்துள்ளது.

வயதான மாமியார்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் குருகுலம்சாலை என்ற பகுதி இருக்கிறது. இந்த ஊரைச் சேர்ந்த 45 வயதாகும் பகவத், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவியின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் டாக்டரின் வீட்டில் அவர் இருந்து வருகிறார். அவரை உடனிருந்து பராமரிக்க மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைகடையை சேர்ந்த சுசீலா (54) என்பவரை வேலைக்கு சேர்த்துள்ளார். சுசீலா தினமும் காலையில் டாக்டரின் வீட்டுக்கு வந்து அவரது மாமியாருக்கு தேவையான பணிவிடைகளை செய்துவிட்டு மாலையில் வீடு திரும்பி வந்துள்ளார்.
தங்க சங்கிலி மாயம்
அதன்படி நேற்றுமுன்தினம் காலையில் சுசீலா வேலைக்கு வந்து விட்டு மாலையில் தனது வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். ஆனால் அவர் சென்ற பின்பு இரவு 7 மணிக்கு டாக்டர் பகவத்தின் மனைவி, தனது தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார் அப்போது தாயார் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலி மாயமாகி இருந்ததை கண்டு ஆடிப்போனார்.
திருடியதை ஒப்புக்கொண்ட சுசீலா
தொடர்ந்து நகையை வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் நகையை வேலைக்காரி சுசீலா திருடி சென்றிருக்கலாம் என சந்தேகம் அவருக்கு எழுந்தது. மேலும் தனது கணவர் டாக்டர் பகவத்திடம் கூறினார். பிறகு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பகவத் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், சுசீலாவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் தங்க சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். அத்துடன் நகையை தனது தங்கை மீனச்சல் பகுதியை சேர்ந்த சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாக கூறியிருக்கிறார்,
தங்கையும் கைது
உடனே போலீசார் மீனச்சலில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் இருந்து நகையை மீட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிய சுசீலா மற்றும் தங்கை சாந்தி ஆகியோரை கைது செய்தனர். வேலை பார்த்த டாக்டர் வீட்டிலேயே நகையை பெண் திருடிய சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
கன்னியாகுமரியில் ஆசையாய் வீடு கட்டி குடியேறிய மக்களுக்கு ட்விஸ்ட்.. கடைசியில் பாதையே இல்லை -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications