Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கன்னியாகுமரி சத்யாவுக்கு 2 கணவன், 2 கள்ளக்காதலன்! யாரை பற்றியும் யோசிக்காத பெண்! இவரெல்லாம் ஒரு தாய்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு சோகமான சம்பவம் குழந்தை பாதுகாப்பு, சட்டம் மற்றும் சமூக பொறுப்பின் அவசியத்தை அனைவருக்கும் நினைவூட்டி உள்ளது.. இது நம்முடைய சமூகத்தில் விழிப்புணர்வு கட்டாயம் தேவை என்பதையும் மீண்டும் எடுத்து காட்டி உள்ளது.. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 பேரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. அப்படி என்ன நடந்தது?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா.. 32 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் ராஜா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்தார்..

Kanyakumari Sathya two husband two lovers 2 2

2வது கணவர் - வாடகை வீடு

ஒருநாள் ராஜா திடீரென இறந்துவிட்டார்.. இதனால் சத்யா மறுபடியும் மணி என்பவரை 2வது திருமணம் செய்து கெண்டார்.. இவர்களுக்கு சந்தோஷி என்ற 4 வயது மகள் உள்ளார்.. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மணியை விட்டு சத்யா பிரிந்து வாழ்ந்து வந்தார்..

சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த ஒரு இளைஞருடன் சத்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இதனால் 2வது கணவரை விட்டுவிட்டு, பெண் குழந்தை சந்தோஷியுடன், அண்ணா சிலை பகுதியில் அந்த இளைஞருடன் வாடகை வீட்டில் குடியேறினார் சத்யா..

தோழியின் காதலன்

அந்த பகுதியில் உள்ள இளம்பெண்ணுடன் சத்யாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.. இந்த தோழியை சந்திக்க அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்துள்ளார் சத்யா. ஒருநாள் தன்னுடைய 20 வயது இன்ஸ்டா காதலன் இசக்கிராஜ் என்பவரை சத்யாவுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் தோழி.. ஆனால் அப்போது முதல் தோழியின் காதலனையும் சத்யா காதலிக்க ஆரம்பித்துவிட்டாராம்..

இது தோழிக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இதனால் இசக்கிராஜிடமும், சத்யாவிடமும் இதுகுறித்து கேள்வி எழுப்பி தகராறு செய்தார் தோழி..

ஆனால் சத்யா யாரை பற்றியும் கவலைப்படாமல், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செட்டியாப்பத்து பகுதிக்கு இசக்கிராஜூடன் குடும்பம் நடத்த வந்துவிட்டாராம்.. அப்போதுதான், சத்யாவின் 4 வயது குழந்தை இவர்களின் உல்லாசத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி சத்யாவுக்கும்., இசக்கி ராஜுவுக்கும் தகராறு வெடித்துள்ளது..

வண்டு கடித்த குழந்தை

பொங்கல் பண்டிகைக்கு சத்யாவை இசக்கிராஜ் பார்க்க வந்துள்ளார்... அதற்கு பிறகு நேற்று முன்தினம் அதாவது 20ம் தேதி, சந்தோஷியை வண்டு கடித்து விட்டதாக சொல்லி உடன்குடி அரசு மருத்துவமனைக்கு சத்யாவும், இசக்கிராஜும் தூக்கி சென்றுள்ளனர்.. டாக்டர்களும் குழந்தையை பரிசோதித்துவிட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஆனால் குழந்தையின் உடல் மற்றும் பிறப்புறுப்புகளில் காயங்கள் இருந்ததை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.. உடனடியாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தையின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..

போஸ்ட் மார்ட்டம்

அப்போது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போலீசார் சத்யாவையும், இசக்கிராஜையும் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்..

கணவன், கள்ளக்காதலன், தோழி என யாருக்குமே உண்மையாக இல்லாமல் சத்யா போன்ற பெண்களை என்ன செய்வது? குன்றத்தூர் அபிராமியை சாகும்வரை ஜெயிலில் போட்டும்கூட, பல அபிராமிகள் இப்படி உருவாகி கொண்டே இருக்கிறார்களே?????

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+