பிரிந்து போன காதலி.. வருத்தத்தில் துப்பாக்கியால் சுட்டு கொண்டு போலீஸ்காரர் தற்கொலை

தன்னை தானே சுட்டு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார்.

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த போலீஸ்காரர், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார்!

கன்னியாகுமரி மாவட்டம் நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் அஜின் ராஜ். இவருக்கு 28 வயதாகிறது. இவர் 2018ல் காவலர் பணிக்கு சேர்ந்து நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு 9வது பட்டாலியனில் பணிபுரிந்து வந்தார்.

Policeman suicide due to love failure in Manimutharu

இந்த நிலையில் கோதையாறு மின்உற்பத்தி மைய பாதுகாப்புப் பணியில் அஜின் ராஜ் அமர்த்தப்பட்டிருந்தார். அப்போது, பாதுகாப்பிற்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Policeman suicide due to love failure in Manimutharu

இதனால் உடன்பணி புரிந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து பேச்சிப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 21 நாள்கள் லீவில் இருந்த அஜின் சில தினங்களுக்கு முன்புதான் வேலைக்கு வந்தாராம். மேலும் இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.

Policeman suicide due to love failure in Manimutharu

ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக சண்டை ஏற்பட்டு பிரிந்து உள்ளதாகவும், அந்த கவலை காரணமாகவே இப்படி தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல்கட்ட தகவல் கூறுகிறது. எனினும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+