கன்னியாகுமரி பேராலயங்களில் புனிதவெள்ளி.. கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த விஜய் வசந்த்
கன்னியாகுமரி: கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் முக்கிய நிகழ்வான புனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேராலயங்களில் வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப் பாதை நிகழ்வும் நடைபெற்றது.
தமிழ்நாடு முழுவதும் புனித வெள்ளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். பின்னர், புனித வெள்ளியையொட்டி கோட்டார் சவேரியார் ஆலயத்தில் தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி தொடங்கிவைத்தார்.

பின்னர், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி முன்பு உள்ள கல்கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பங்கு தந்தையர்களுடன் கஞ்சி அருந்தினார். அதனை தொடர்ந்து டபிள்யூ.சி.சி. ஜங்ஷன் நண்பர்கள் நடத்திய 4 ஆண்டு புனித வெள்ளி தவக்கால கஞ்சி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கஞ்சி வழங்கினார். இதில், மாநகர மாவட்ட தலைவர் நவீன்குமார் மற்றும் பங்குத் தந்தைகள் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications