Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கண்ணே கூசுது".. மோசமா ஆடை அணிந்து நின்ற மனைவி.. பைக்கை நிறுத்திவிட்டு கிட்ட வந்த கணவர்.. ஐயையோ..!!

மோசமாக ஆடை அணிவது தொடர்பாக, மனைவியை வெட்டி கொன்றார் கணவர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: தன் மனைவி, மோசமாக டிரஸ் அணிவது கணவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.. அதுக்காக இப்படியா செய்வது? ஆடிப்போய் கிடக்கிறது குமரி மாவட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்துள்ளது தச்சகோடு என்ற பகுதி.. இங்கு வசித்து வந்தவர் எபனேசர்.. 35 வயதாகிறது.. இவர் சொந்தமான டெம்போ வைத்து ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெப பிரின்ஷா.. 31 வயதாகிறது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. இவர்களுக்கு ஜெப சோபன் 14, ஜெப ஆகாஷ் 13, என்று 2 மகன்கள் இருக்கிறார்கள்.

பியூட்டிஷியன்

பியூட்டிஷியன்

இத்தனை நாளாக வீட்டில் இருந்த ஜெப பிரின்ஷாவுக்கு திடீரென பியூட்டீஷியனாகும் ஆசை வந்துவிட்டது.. அதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார்... 3 மாதங்களுக்கு முன்புதான், இந்த வகுப்பில் போய் சேர்ந்தார்.. இது ஒரு வருட பயிற்சி வகுப்பாகும்... ஜெப பிரின்ஷாவின் அப்பா பெயர் ஜெபசிங்... இவர்தான், தன்னுடைய மகளை நெய்யூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுவிடுவார்.. அங்கிருந்து ஜெப பிரின்ஷா ரயிலில் திருவனந்தபுரம் செல்வார்.. பிறகு சாயங்காலம், கணவர் எபனேசர், ஸ்டேஷனில் இருந்து வீட்டுக்கு அழைத்து வருவார்... இப்படியே 3 மாதங்கள் சென்றன..

 மோசம் மோசம்

மோசம் மோசம்

ஆனால், நாளடைவில் ஜெப பிரின்ஷாவின், உடைகள் அணிவதில் நிறைய மாற்றம் தெரிந்துள்ளது.. வழக்கத்துக்கு மாறாக, அலங்காரமும், ஆடைகளையும் அணிவதால், கணவர் எபனேசர் அதிர்ந்து போனார்.. மனைவியை கண்டித்தார்.. இப்படியெல்லாம் மோசமாக ஆடைகளை அணிந்து, வெளியே செல்ல வேண்டாம் என்று கண்டித்து உள்ளார்.. ஆனால், ஜெப பிரின்ஷா அவர் பேச்சை கேட்கவில்லை.. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த எபனேசர், பியூட்டிஷியன் படிப்புக்கு செல்ல வேண்டாம் என்றும் மனைவியை தடுத்துள்ளார்..

 பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர்

அதற்கு ஜெப பிரின்ஷா, இது ஒரு வருட படிப்புதான்.. அதை முடித்து விட்டால், சொந்தமாகவே பியூட்டி பார்லர் வைக்கலாம் என்று சொல்லி உள்ளார்.. இதுவே தம்பதிக்குள் வாக்குவாதமாகவும் வெடித்துள்ளது.. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, அம்மா வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர சென்றார் ஜெபனேசன்.. அப்போது இரவு 11 மணி ஆகிவிட்டது.. வீட்டுக்கு திரும்பி வரும் வழியில் தம்பதிக்குள் தகராறு வெடிக்க, ஆத்திரத்தில் இருந்த எபனேசர், பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அதற்கு பிறகு அரிவாளை எடுத்து வந்து மனைவியை சரமாரியாக வெட்டினார்.. பிறகு, இருட்டு பகுதியில் எகிறி தப்பி ஓடினார்..

 பியூட்டிஷியன்

பியூட்டிஷியன்

தலையில் பலத்த காயமடைந்த ஜெப பிரின்ஷா அங்கேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.. அந்த வழியாக வந்தவர்கள், ஜெப பிரின்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் ஜெப பிரின்ஷா இறந்துவிட்டார்.. தகவலறிந்து தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெப பிரின்ஷா உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான எபனேசரை தேடி வந்தனர்.. அவர் திருவனந்தபுரத்தில் மறைந்திருப்பதாக தகவல் கிடைக்கவும், அங்கு விரைந்தனர்..

 மோசமான டிரஸ்

மோசமான டிரஸ்

ஆனால், போலீஸை பார்த்ததுமே அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.. எனினும் அவரை கடைசி நேரத்தில் மீட்டு போலீசார் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.. இதையடுத்து தனிப்படை போலீசாரும் அங்கு விரைந்துள்ளனர். விசாரணைக்கு பிறகே இது தொடர்பாக உறுதியாக கூற முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மனைவி டிரஸ் அணிவதில் திடீரென ஏற்பட்ட மாற்றம், கொலை வரை சென்றது, குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. நாளுக்கு நாள் இந்த மாவட்டத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதும் கவலையை தந்து வருகிறது.. நம் குமரிக்கு என்னதான் ஆச்சு??

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+