அரவக்குறிச்சி.. ஆளில்லாமல் தவிக்கும் அமமுக.. பணமிருந்தும் 10 பேர் கூட இல்லையாம்!
Recommended Video
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு கூடும் கூட்டம் அதிமுக, அமமுக வேட்பாளர்களுக்கு கூடுவதில்லையாம்.
அமமுக சார்பில் சாகுல்ஹமீது என்பவர் வேட்பாளராக களம் காண்கிறார். பள்ளப்பட்டி முழுவதும் இஸ்லாமியர்கள் நிறைந்த ஊர் என்பதால் அந்த ஊர்காரரையே வேட்பாளராக்கினார் டிடிவி தினகரன்.
பல ஆண்டுகளாக சாகுல்ஹமீது கட்சிப்பணிகளில் இருந்து ஒதுங்கியே இருந்தி விட்டு திடீரென வேட்பாளராகியதால் அவரை பற்றி லோக்கல் நிர்வாகிகளுக்கே சரியாக தெரியவில்லையாம்.
இந்நிலையில் தலைமையிடம் இருந்து செலவுக்கு தாராளமாக வைட்டமின் ப வந்திறங்கியுள்ளதாம். ஆனால் அதை பிரித்துக் கொடுக்க கூட ஆள் இல்லாமல் வேட்பாளர் சாகுல் ஹமீது தவிக்கிறாராம்.
வந்துருச்சு கோடை விடுமுறை.. வெளுக்குது வெயில்.. ஃபாரீன் டூர் கிளம்பிய ஸ்டாலின் குடும்பத்தினர்
பக்கத்து மாவட்டமான திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட அமமுக நிர்வாகிகள் அரவக்குறிச்சியில் முகாமிட்டு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அவர்களிடம் நாம் பேசிய போது, "பிரச்சாரத்துக்கு தான் நாங்கள் செல்லமுடியும். ஓட்டு போடவுமா செல்ல முடியும்? பணமிருந்தும் வேட்பாளர் கூட லோக்கல் நிர்வாகிகள் யாரும் வர மாட்டேங்கிறார்கள்... என்னன்னே எங்களுக்கு புரியலை" என்றனர்.
என்னடா இது அரவக்குறிச்சி அமமுகவுக்கு வந்த சோதனை!