Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"காலில் விழுந்த பிறகு கர்சீப் எதுக்கு?" ஸ்டாலின் தாக்கு! எடப்பாடி பற்றி சொன்னதும் உதயநிதி ரியாக்ஷனை பாருங்க

Subscribe to Oneindia Tamil

கரூர்: திமுகவின் முப்பெரும் விழா இன்று கரூரில் நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாக விமர்சித்தார். கொள்கை என்றால் என்னவென்றே தெரியாத எடப்பாடி பழனிசாமி, அதிமுகவையே அமித்ஷாவிடம் எழுதிக் கொடுத்துவிட்டதாகச் சாடியுள்ளார்.

கரூர் கோடங்கிபட்டியில் திமுக முப்பெரும் விழா இன்று நடந்தது. அண்ணா பிறந்தநாள், பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா கொண்டாடப்படும். அதன்படியே இந்தாண்டு கரூரில் இந்த விழா நடைபெற்றது. இதில் திமுகவினர் அதிகளவில் கலந்து கொண்டனர்.

DMK Mupperum Vizha Stalin questions Edappadi Palanisamy why he covering face after meeting Amit Shah

ஸ்டாலின்

இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களைப் பட்டியலிட்ட அவர், அடுத்தாண்டு நடக்கும் தேர்தலுக்குத் திமுகவினர் தீவிரமாக உழைக்க வேண்டும் திமுக தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். மேலும், மத்திய அரசு வஞ்சித்தாலும் அதைத் தாண்டி தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தக் கூட்டத்தில் அவர் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியையும் மிகக் கடுமையாக விமர்சித்தார்.

எடப்பாடி மீது தாக்கு

ஸ்டாலின் மேலும் பேசுகையில், "ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது எதையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களுக்காகக் குரல் கொடுக்கும் தேம்பும் திராணியும் இல்லாமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். இப்போதும் பாஜக தன்னுடன் இருக்கிறது என்று வாய்க் கொழுப்போடு பேசிக்கொண்டு இருக்கிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பு கூட இல்லாமல் என்னை ஒருமையில் பேசிக் கொண்டு இருக்கிறார். கொள்கை இல்லாமல் தொடை நடுங்கும் பழனிசாமியின் தரத்தை மக்களே எடைபோட்டுப் பார்த்துக் கொள்வார்கள். ரெய்டுகளில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள அதிமுகவையே அடகு வைத்துவிட்டார்.

அடிமையிசம் தான் கொள்கையாம்

திராவிடம் என்றால் என்ன என்று கேட்டால் அதெல்லாம் எனக்குத் தெரியாது என சொன்னவர் தான் அவர். திராவிடம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் அவர் அதிமுக தலைமைப் பொறுப்பில் இருக்கிறார் என்பதுதான் வெட்கக்கேடு. அதிமுக தொடங்கப்பட்ட போது அண்ணாயிசம் தான் கொள்கை என்றார்கள். அதை இப்போது அடிமையிசம் என மாற்றி, அமித் ஷாவிடம் சரணடைந்துவிட்டார் பழனிசாமி.

முகத்தை மூட கர்சீப் எதுக்கு?

முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு எனக் கேட்பார்கள். அதுபோல தான் நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியை பார்த்து இப்போது எல்லாரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா.. காலிலேயே விழுந்த பிறகு இப்போது முகத்தை மூட கர்சீப் மட்டும் எதுக்கு என்றே கேட்கிறார்கள். அப்படிப்பட்ட நபரின் தரம் தாழ்ந்த பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்லத் தேவையில்லை" என்றார். எடப்பாடியை பற்றி முதல்வர் ஸ்டாலின் இப்படிச் சொன்னவுடன் மேடையில் இருந்த உதயநிதி சட்டென சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இதைப் பார்த்தவுடன் தொண்டர்கள் மேலும் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்.

டெல்லிக்கு சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, நேற்றிரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டம் முடிந்துவிட்டு வெளியே வரும்போது எடப்பாடி பழனிசாமி கர்சீப் மூலம் முகத்தை மூடியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் நேற்றே இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. மேலும், அரசியல் அரங்கிலும் அது விவாதமாக வெடித்து. இப்போது அதைக் குறிப்பிட்டே முதல்வர் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+