கரூரில் குடிபோதையால் விபரீதம்.. கடப்பாரையால் தாயை தாக்கி கொலை செய்த மகன் கைது
கரூர் : ''தகராறு செய்யாதே மகனே'' என்று கூறிய தாயை கடப்பாரையால் மகன் கொலை செய்த சம்பவம் கரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - குடிபோதையின் விளைவால் பெற்ற தாயை மகன் கொன்றுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், ஆண்டிப்பட்டிகோட்டை பகுதியினை அடுத்த ஜங்கால்பட்டியைச் சேர்ந்த முத்துராஜ் (35), இவர் பக்கத்து வீட்டில் உள்ள சக்திவேல் என்பவருடன் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட மகன் முத்துராஜை அவரது தாய் பழனியம்மாள் கண்டித்துள்ளார்.

மேலும் தகராறு வேண்டாம் மகனே என்றும் கூறியுள்ளதாக தெரிய வருகின்றது. இதனால் கடும் குடிபோதையில் இருந்த மகன் முத்துராஜ், உடனே ஆத்திரமடைந்து அருகில் இருந்த கடப்பாரையை எடுத்து தாய் பழனியம்மாள் தலையில் பலமாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக அரவக்குறிச்சி போலீஸார் முத்துராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த தாய் பழனியம்மாள் பிரேதம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கடும் குடி போதை காரணமாக பெற்ற தாயை கடப்பாரையால் அடித்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications