விஜய் மேலே தப்பில்லை.. ஒரு போலீஸ் கூட ஸ்பாட்டில் இல்லையாம்! கரூரில் மகனை இழந்த பெண் வேதனை
கரூர்: ‛‛விஜயை பார்க்க வந்த என் 13 வயது பையன் இறந்துவிட்டான். 50 பேர் மீது 50 பேர் விழுந்து கிடந்தார்கள். அவன் நின்ற இடத்தில் ஒரு போலீஸ் கூட இல்லை. போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை இழந்து போய் நிற்கிறோம். நாங்கள் விஜய் சார் மீது எந்த குறையையும் சொல்ல வேண்டாம். செந்தில் பாலாஜி சார் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சிஎம் சார் எங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்று கூட்ட நெரிசலில் 13 வயது மகனை பறிகொடுத்த பெண் கலங்கினார்.
விஜய் சார் மீது விஜய் பேசியபோது எல்லோரும் தூரமாக தான் நின்றார்கள். பவர் கட் ஆனது. விஜய் பேசுவது கேட்கவில்லை. இதனால் கொஞ்சம் முன்னோக்கி செல்வோம் என்று நகர்ந்தனர். ஆர்வமாக முன்னோக்கி சென்றதால் நெரிசல் ஏற்பட்டது'' என்று மயங்கிய பெண்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற ஆம்புலன்ஸில் இருந்த ஒரு பெண் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர்.
6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 31 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது.
காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சைகள் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் மருத்துவமனை வளாகத்தில் கண்ணீருடன் கதறி வருகின்றனர். மேலும் உயிரிழப்புகளுக்கு விஜய் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில் தான் கூட்ட நெரிசலில் 13 வயது மகனை இழந்த பெண் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ‛‛எங்க பையன் இறந்துவிட்டான். விஜயை பார்க்க வந்தான். அவன் நின்ற இடத்தில் ஒரு போலீஸ் கூட இல்லை. 50 பேர் மீது 50 பேர் விழுந்து கிடந்தாங்க. யாரும் யாரையும் தூக்கவில்லை. ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை? அதற்கு எங்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
போலீஸ் பாதுகாப்பு ஏன் கொடுக்கவில்லை. நாங்கள் இருந்த இடத்தில் ஒரு போலீஸ் கூட இல்லை. நீங்கள் ஏன் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை. நாங்கள் ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவரை இழந்து போய் நிற்கிறோம். நாங்கள் விஜய் சார் மீது எந்த குறையையும் சொல்ல வேண்டாம். செந்தில் பாலாஜி சார் எங்களுக்கு பதில் சொல்ல வேண்டும். சிஎம் சார் எங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்'' என்று கலங்கினார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications