மீண்டும் ஜோதிமணியா? திமுகவிடம் போராடி பெற்ற கரூரில் காங்கிரஸ் ஜெயிக்குமா? லேசா புகையுதே! களநிலவரம்
கரூர்: வரும் லோக்சபா தேர்தலில் திமுக தான் இந்த முறை போட்டியிடும் எனக்கூறப்பட்டு வந்த நிலையில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதியின் வேட்பாளராக யார் நிறுத்தப்பட உள்ளார்? மீண்டும் கரூரில் காங்கிரஸ் வெல்லுமா? தொகுதி நிலவரம் என்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, நெல்லை, சிவகங்கை, கரூர், கன்னியாகுமரி, விருதுநகர், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதுதவிர புதுச்சேரி தொகுதியும் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 10 இடங்களில் களமிறங்க உள்ளது. வரும் லோக்சபா தேர்தலில் கரூர் லோக்சபா தொகுதியில் திமுக போட்டியிட விரும்பியதாக கூறப்பட்டது. இதனால் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை. கரூருக்கு பதில் வேறு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகின.
ஆனால் இன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பட்டியலில் கரூரும் இடம்பெற்றிருந்தது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதாவது கரூர் லோக்சபா தொகுதியை பொறுத்தமட்டில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி கரூர், கிருஷ்ணநாராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை உள்ளிட்ட 6 சட்டசபை தொகுதிகள் கரூர் நாடாளுமன்ற தொகுதியாக உள்ளன.
இதில் விராலிமலையை தவிற பிற 5 தொகுதிகளிலும் திமுகவினர் தான் எம்எல்ஏவாக உள்ளனர். கரூரில் செந்தில் பாலாஜி போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் இது அவரது சொந்த மாவட்டம் என்பதால் அவரது குடும்பத்தினர் அல்லது அவரது ஆதரவாளர்களின் ஒருவருக்கு சீட் வழங்கப்படும் என எதிர்க்கப்பட்டது. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி இந்த தொகுதியை தக்க வைத்துள்ளது.
இந்த கரூர் தொகுதியை கண்டிப்பாக திமுகவிடம் பெற்றுவிட வேண்டும் என்று சிட்டிங் எம்பி ஜோதிமணி முயற்சித்தார். ஜோதிமணி காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி திமுக தலைமையை சமாதானப்படுத்தி கரூரை மீண்டும் தக்கவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் மீண்டும் கரூர் தொகுதியில் ஜோதிமணி எம்பி தான் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
கரூர் தொகுதியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு வாக்கு சதவீதம் உள்ளது. கடந்த 1957 ம் ஆண்டு முதல் 2019 வரை மொத்தம் 16 லோக்சபா தேர்தலை கரூர் தொகுதி சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 1957 காங்கிரஸின் பெரியசாமி கவுண்டர், 1962ல் ராமநாதன் செட்டியார், 1967 ல் சுதந்திர கட்சியின் முத்துசாமி கவுண்டர் 1971, 1977 ல் காங்கிரஸின் கோபால், 1980, 84ல் ஏஆர் முருகையா, 1989 ல் அதிமுகவின் எம் தம்பிதுரை 1991ல் அதிமுகவின் முருகேசன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
அதன்பிறகு 1996ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கே நடராயனும், 1998 ல் அதிமுகவின் எம் தம்பிதுரை, 1999ல் எம் சின்னசாமி, 20004ல் திமுகவின் கேசி பழனிசாமி வெற்றி பெற்றனர். அதன்பிறகு 2009, 2014 ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து அதிமுக சார்பில் தம்பிதுரை வெற்றி பெற்றார்.
2019ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றார். இவர் சிட்டிங் எம்பியாக இருந்த எம் தம்பிதுரையை வீழ்த்தினார். ஜோதிமணி 6 லட்சத்து 95 ஆயிரத்து 697 ஓட்டுகள் பெற்ற நிலையில் எம் தம்பிதுரை 2,75,151 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் கரூர் தொகுதியில் 4 முறை அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தம்பிதுரையை, ஜோதிமணி 4 லட்சத்து 20 ஆயிரத்து 546 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார். தற்போது மீண்டும் காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி, அதிமுக சார்பில் தம்பிதுரை இந்த தொகுதியில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
தற்போது செந்தில் பாலாஜி சிறையில் இருப்பது ஜோதிமணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும். மேலும் உள்ளூர் திமுக தலைவர்கள் கரூர் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுதொடர்பாக திமுக தலைமைக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு கரூர் வழங்கப்பட்டுள்ளதால் அந்த நிர்வாகிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால் அதிருப்தியாளர்களை சரிசெய்ய வேண்டிய கட்டாயம் ஜோதிமணி எம்பிக்கு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் கரூர் தொகுதியில் இந்த முறை லோக்சபா தேர்தல் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications