தவெக நிர்வாகி தலையில் விழுந்த கொடி கம்பம்.. கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத்! சலசலப்பு
கரூர்: கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் திடீரென சரிந்து விழுந்த கட்சிக் கொடி கம்பம், மேடையில் நின்றுகொண்டிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார். விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடர்ந்து உரையாற்றியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கரூர் 80 அடி ரோட்டில் தவெக 3ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இந்த கூட்டம் தொடங்கும்போது மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன், ஜெகதீச பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, மழை குறுக்கிட்டதால் கூட்டத்தில் இருந்தவர்கள் நாற்காலியை தலைக்கு பிடித்தவாறு நின்று கொண்டிருந்தனர். இந்த சூழலில், மேடையின் வலது புறம் நடப்பட்டிருந்த தவெக கொடிக் கம்பம் மின் கம்பி மீது உரசியதில் திடீரென தீப்பிடித்தது. பின்னர் அந்தக் கொடிக்கம்பம் சாய்ந்து, மேடையில் நின்றிருந்த பேச்சாளர் ஜெகதீஷ் பாண்டியன் மீது விழுந்தது.
ஜெகதீஷ் பாண்டியின் நெற்றியில் கொடிக் கம்பம் விழுந்தது. இதில் அவர் லேசான காயமடைந்தார். பின்னர் உடனே ஜெகதீச பாண்டியன் தனது காரில் ஏறி கிளம்பிச் சென்றுவிட்டார். விபத்து நிகழ்ந்த தருணத்திலும், அதைப் பொருட்படுத்தாமல் தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தார்.

நாஞ்சில் சம்பத் நின்று பேசிக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு அருகில் தான் ஜெகதீச பாண்டியன் நின்று கொண்டிருந்தார். அவர் மீது கொடிக் கம்பம் விழுந்த நிலையில், மேடையில் இருந்த மற்ற நிர்வாகிகள் பதறினர். ஆனால், நாஞ்சில் சம்பத் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசியது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் நடத்திய தேர்தல் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இதனால் 72 நாட்கள் வீட்டை விட்டே வெளியில் வராமல் முடங்கினார் அக்கட்சியின் தலைவர் விஜய். கடந்த 2 மாதங்களாகத்தான் ஈரோடு, சேலம், வேலூரில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார் விஜய். இந்நிலையில் தற்போது, மீண்டும் கரூரில் நடந்த கூட்டத்தில் கட்சிக் கொடி சரிந்து தீப்பிடித்து எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications