Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்படியே வெண்ணிலா கபடிக்குழு மாதிரி.. கபடி ஆடிய இளைஞர்.. சட்டென பலியான பரிதாபம்.. கரூரில் சோகம்

கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார்.

Subscribe to Oneindia Tamil

கரூர்: கரூரில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, கொரானாவுக்கு பிறகு இத்தகைய மாரடைப்புகள் அதிகரிப்பதால் இதுகுறித்து அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாரடைப்பு அச்சம்

மாரடைப்பு அச்சம்

இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. கல்லூரி மாணவி மாரடைப்பால் மரணம்; கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்களே விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கொரானாவுக்கு பிறகு..

கொரானாவுக்கு பிறகு..

குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார். இது ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசிகளால்தான் இந்த மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு கூற்று பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரிட்டனை சேர்ந்த இதய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாரடைப்பை ஏற்படுத்துவதாக அண்மையில் தெரிவித்தார்.

கபடி விளையாடி போது..

கபடி விளையாடி போது..

இந்நிலையில், கபடி விளையாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கணக்கப்பிள்ளையூர் கிராமம். இங்கு நேற்று கபடி விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் இந்தப் போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கபடி ரைடு சென்ற மாணிக்கம் (28) என்ற இளைஞர் திடீரென மைதானத்தில் சாய்ந்தார்.

பரிதாபம்

பரிதாபம்

இதை பார்த்து பதறிபோன சக விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். மாணிக்கம் இறந்ததை அறிந்த அவரது நண்பர்களும், பெற்றோரும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+