அப்படியே வெண்ணிலா கபடிக்குழு மாதிரி.. கபடி ஆடிய இளைஞர்.. சட்டென பலியான பரிதாபம்.. கரூரில் சோகம்
கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார்.
கரூர்: கரூரில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழந்து வருவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, கொரானாவுக்கு பிறகு இத்தகைய மாரடைப்புகள் அதிகரிப்பதால் இதுகுறித்து அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாரடைப்பு அச்சம்
இந்தியாவில் சமீபகாலமாக மாரடைப்பு உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, இளம் வயதினர் மத்தியில் இந்த மாரடைப்பு அதிகரித்திருக்கிறது. கல்லூரி மாணவி மாரடைப்பால் மரணம்; கபடி விளையாடிய 10-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு போன்ற செய்திகள் அன்றாடம் கேட்கக்கூடிய ஒன்றாக மாறிவிட்டன. திடீரென இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்ததற்கான காரணம் தெரியாமல் மருத்துவர்களே விழிபிதுங்கி நிற்கின்றனர்.

கொரானாவுக்கு பிறகு..
குறிப்பாக, கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகே இதுபோன்ற மாரடைப்புகளை அதிக அளவில் காண முடிகிறது. அண்மையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனும் இந்த தகவலை உறுதி செய்தார். இது ஒருபுறம் இருக்க, கொரோனா தடுப்பூசிகளால்தான் இந்த மாரடைப்பு ஏற்படுவதாக ஒரு கூற்று பரவி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரிட்டனை சேர்ந்த இதய மருத்துவர் அசீம் மல்ஹோத்ரா, கோவிஷீல்டு தடுப்பூசிகள் மாரடைப்பை ஏற்படுத்துவதாக அண்மையில் தெரிவித்தார்.

கபடி விளையாடி போது..
இந்நிலையில், கபடி விளையாடிக் கொண்டிருந்த ஒரு இளைஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது கணக்கப்பிள்ளையூர் கிராமம். இங்கு நேற்று கபடி விளையாட்டுப் போட்டி நடந்து கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கானோர் இந்தப் போட்டியை கண்டு களித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கபடி ரைடு சென்ற மாணிக்கம் (28) என்ற இளைஞர் திடீரென மைதானத்தில் சாய்ந்தார்.

பரிதாபம்
இதை பார்த்து பதறிபோன சக விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் அவரை அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி மாணிக்கம் உயிரிழந்தார். மாணிக்கம் இறந்ததை அறிந்த அவரது நண்பர்களும், பெற்றோரும் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications