5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய மயில் ஓவியம் கிருஷ்ணகிரியில் கண்டெடுப்பு.. தமிழகத்திலேயே பெரியது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழகத்திலேயே பெரிய மயிலின் ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கிருஷ்ணகிரி, வெங்கடாபுரம் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சுப்பிரமணி மற்றும் ஊர்மக்கள் அழைப்பின் பேரில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து தலைவர் நாரயணமூர்த்தி தலைமையில் ஒரு பிரமாண்டமான செங்காவி மயில் ஓவியத்தை உள்ளடக்கிய ஓவியத்தொகுதியை கண்டறிந்தது.
இந்த செங்காவி ஓவியம் குறித்து, கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி அருகேயுள்ள ஆஞ்சநேயர் மலையின் உச்சிப் பகுதியில், கிருஷ்ணகிரி மாவட்ட பாறை ஓவியங்களிலேயே மிக முக்கியமான பாறை ஓவியத் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.

முக்கியமானது
செந்சாந்து ஓவியம் புதிய கற்கால கலாச்சாரங்களை கொண்டதாக உள்ளது. இறந்தவரை போல இதுவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 9 அடி நீளமுள்ள செங்காவி நிற வண்ணத்தில் மயில் ஓவியம், பாய்ந்து வரும் மாடு, உடும்பு, கழுதைப்புலி ஓவியங்கள் மிகச்சிறப்பாக உள்ளன.

பிற்காலம்
இத்தோடு கொக்கு, குரங்கு, மான் போன்ற விலங்குகள் பிற்காலத்தில் புதிய கற்காலம் தொடங்கி பெருங்கற்காலம் வரை மக்களின் முக்கிய வாழ்விடமாக இருந்திருக்க வேண்டும் என்றார். இதில் உள்ள இக்கழுதைபுலி உருவம் பற்றி காப்பாட்சியர் கோவிந்தராஜ் குறிப்பிடும்போது அலங்காரத்துடன் இந்த ஓவியமானது காணப்படுவதால் இது ஒரு கற்பனை உருவமாய் இருக்கலாம். இத்தகைய கற்பனை உருவங்கள் சிந்து சமவெளி முத்திரைகளிலும் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

மலை அடிவாரம்
வரலாற்று ஆய்வாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் கூறுகையில், இம்மலையில் 2000 ஆண்டுகளாக குரங்குகள் இருந்திருந்ததால் மலை உச்சியில் வெண்சாந்திலான குரங்கின் உருவமும், மலை அடிவாரத்தில் இன்றும் உள்ள ஏரியில் அன்று அவர்கள் பார்த்த மான் மற்றும் கொக்கின் உருவத்தையும் அழகாக வரைந்துள்ளார்கள். இவை வாழ்வியலுடன் தொடர்புடையது.

செங்காவி ஓவியம்
இதுவரை தமிழ்நாட்டில் கண்டறியப்படாத 9 அடி நீளமுடைய செங்காவி ஓவியமாக மயில் தோகை, கொண்டை, அலகு போன்றவை அழகாக தெரியும் வண்ணம் வரையப்பட்டுள்ளது. இது செங்காவி நிறத்தில் வரையப்பட்ட பறவை ஓவியங்களில் இந்தியாவிலேயே பெரியதாக இருக்கக் கூடும். மேலும் ஒரு புலியின் உருவமும் வரையப்பட்டுள்ளதாக கூறினார். இவ்ஓவியத் தொகுதி பற்றிய ஆய்வு தேவை எனவும் கூறினார்.

4 உருவங்கள்
தொல்லியல் ஆய்வாளர் சுகவனமுருகன் கூறுகையில், உடும்பு மிகச்சிறப்பான ஆய்வுக்குறி செங்காவி ஓவியத்தொகுதியாகும். இதில் மேற்பகுதியில் ஒரு உடும்பின் ஓவியம் மிகச்சிறப்பாக வரையப்பட்டுள்ளது. பாய்ந்து செல்லும் வகையில் மாடு காட்டப்பட்டுள்ளது. கை உருவமும் வரையப்பட்டுள்ளது. அதன் அருகே தெளிவற்ற நிலையில் 4 உருவங்கள் காணப்படுகின்றன எனவும் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications