ஓசூருக்கு ரோடு சரியில்லை.. கிருஷ்ணகிரி ஹைவேஸில் 18 மணி நேரமா? அப்படியே ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை
கிருஷ்ணகிரி: ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வாகன ஓட்டிகள் அரசுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர், பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன... இப்போது போலுப்பள்ளி அரசு மருத்துவ கல்லுாரி, மேலுமலை, சாமல்பள்ளம், கொல்லப்பள்ளி, கோபசந்திரம், பேரண்டப்பள்ளி, சிப்காட் ஜங்ஷன் வரை, 13 கி.மீ., தொலைவில் 6 இடங்களில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்காரணமாக, நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாகிவிட்டது..

அதற்கேற்றவாறு, உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளும், தற்போது மெதுவாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.. இதன்காரணமாகவும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மழை வெள்ளம்: இப்படிப்பட்ட சூழலில் மழைக்காலம் துவங்கிவிட்டது.. கடந்த ஒரு வாரமாகவே கிருஷ்ணகிரி மாவட்டத்தை சுற்றிலும் பலத்த மழை பெய்து வருகிறது.. அந்தவகையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில், கிருஷ்ணகிரியில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.. இதனால் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில், பல இடங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
முக்கியமாக, மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்துவரும் பகுதிகளில், பல இடங்களில் மண் சரிந்தது... இதனால் மேம்பால பகுதி சாலையில், மண்ணுடன் மழைநீர் சேர்ந்து சகதியானது..
சர்வீஸ் சாலை: சர்வீஸ் சாலையிலும் வெள்ளப்பெருக்கு போல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.. இதனால் இரவு 11 மணியளவில் ஓசூர் - கிருஷ்ணகிரி ஹைவேஸின் 2 மார்க்கத்திலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.. இதன்காரணமாக, பல கிலோ மீட்டர் தூரத்திற்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன.
ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு 52 கிலோ மீட்டர் தூரத்தை பேருந்துகள் கடக்கவே, கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டதாம்.. இதனால் விடிய விடிய வாகனங்கள் வரிசைகட்டி நின்றன.. மறுநாள் காலையும் இந்த போக்குவரத்து சீராகவில்லை.. மாலை 4 மணி வரை அதாவது கிட்டத்தட்ட 18 மணி நேரமாக டிராபிக் சீராகவில்லை.. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளானார்கள்.
பெங்களூர்: மழைக்காலம் என்றில்லை, கிருஷ்ணகிரி சாலையில் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தொடர்கதையாகிவருகிறது.. பெங்களூரில் உள்ள அத்திபெலே என்ற இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 44ல் கிருஷ்ணகிரி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றுவிடுகிறதாம்.. அதனால், பெங்களூரில் இருந்து கிளம்பினாலும்கூட, 4 மணி நேரம் ஆகியும் கிருஷ்ணகிரிக்கு செல்ல முடியவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டிகள். கிருஷ்ணகிரி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
கிருஷ்ணகிரி: தமிழகத்திலேயே அதிக சுங்க தொகையை வசூலிக்கும் சுங்கச்சாவடியாக இது திகழ்வதுடன், அதிகபட்ச டிராபிக் நெரிசலை ஏற்படுத்தும் சுங்கச்சாவடியாகவும் இருக்கிறது. 10 நொடி விதி என்பது வெறும் விதியாகவே இருக்கிறதே தவிர, அதை யாருமே சரியாக பின்பற்றுவதில்லை என்று வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள். இந்தியாவில் டாப் 5க்குள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அடங்கியிருப்பதால், இதற்கெல்லாம் விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications