2 கைகள் இல்லை! 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற தன்னம்பிக்கை மாணவன்!

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: பிறக்கும் போதே 2 கைகள் இல்லாமல் பிறந்த க்ரித்தி வர்மா என்ற மாணவர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தன்னம்பிக்கையால் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளார்.

500க்கு 437 மதிப்பெண்கள் பெற்றுள்ள க்ரித்தி வர்மா, நெடுமருதி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பில் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

Krithi Varma, who was born without 2 hands at birth, achieved a feat by scoring first marks in the 10th public exam

இவருக்கு ஆசிரியர்கள் மற்றும் நெடுமருதி கிராமமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நெடுமருதி கிராமத்தை சேர்ந்தவர் க்ரித்தி வர்மா. பிறவியிலேயே கைகள் இல்லாத இவர் கல்வி கற்பதில் காட்டிய அக்கறையை கண்டு அவரை அவரது தாயார் படிக்க வைத்து வருகின்றனர்.

க்ரித்தி வர்மா சிறுவயதாக இருந்தபோதே அவரது தந்தை காலமாகிவிட்டதால் கூலி வேலைக்குச் செல்லும் தாயார் தான் படிக்க வைத்து வருகிறார்.

குடும்பத்தில் வாட்டி வதைக்கும் கஷ்டம், எல்லா மாணவர்களையும் போல் எழுத முடியாத சூழல் என பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் படிப்பை மட்டும் கீர்த்தி வர்மா கைவிடவேயில்லை.

இவரது படிப்பாற்றலை கண்டு ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும், உற்சாகமும் இன்று மிகப்பெரிய வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறது.

டியூசன் செல்லாமல், ஸ்பெஷல் கிளாஸ் செல்லாமல் அரசுப்பள்ளியில் படித்து 500க்கு 400 மதிப்பெண்கள் பெற்று தனது தன்னம்பிக்கையால் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் கீர்த்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+