இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழக எல்லைக்குள் அனுமதி.. கர்நாடகா எல்லையில் தீவிர சோதனை
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தமிழக மாநில எல்லையாக. உள்ள ஜூஜூவாடியில், வருவாய்துறை அதிகாரிகள் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையை நடத்தி வருகின்றனர்.
Recommended Video
கர்நாடகா ,ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா உள்பட மற்ற மாநில வாகனங்களில் வருவோரில் இ பாஸ் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள். மற்றவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு ஐந்தாயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அரசு தீவிரம்
தமிழகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இபாஸ் இல்லை என்றாலும், கர்நாடகா ,ஆந்திரா, புதுச்சேரி தவிர பிற மாநிலங்களில் இருந்து வருவோர் இபாஸ் எடுத்திருக்க வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

வாகனங்கள் சோதனை
இதன் அடிப்படையில் தமிழக கர்நாடகா எல்லையிலும், ஆந்திரா எல்லைகளிலும், கேரளாவின் எல்லைகளிலும் 10ம் தேதி முதல் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. எல்லையில் வாகனங்களில் வருவோரை முககவசம் அணிய வலியுறுத்துகிறார்கள். ரள பதிவெண் கொண்ட வாகனளில் வருவோர் இபாஸ் இருந்தால் தான் அனுமதிக்கிறார்கள்.

இபாஸ் கட்டாயம்
இதனிடையே கர்நாடகா மாநில எல்லையிலும் வாகனங்கள் ஒவ்வொன்றும் தீவிரமாக கவனிக்கப்படுகிறது. கர்நாடகா ,ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில பதிவு எண் இல்லாத மற்ற மகாராஸ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநில வாகனங்கள் கட்டாயம் இ- பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எச்சரிக்கை
கர்நாடக மாநில வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் இரண்டு, மூன்று நபர்களுக்கு மிகாமல் வாகனங்களில் செல்ல அறிவுறுத்தப்படுவதுடன் அதிகமானோர் பயணித்து வரும் கார்களுக்கு வருவாய் அதிகாரிகள் அபராதம் விதித்து கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications