கேஸ் குடுத்தேனே.. ஏன் எடுக்கவில்லை.. கொந்தளித்த பச்சையம்மாள்.. 2 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி
இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
Recommended Video
கிருஷ்ணகிரி: "கேஸ் குடுத்தேனே.. ஏன் யாருமே எடுக்கவில்லை" என்று கேட்டு, பச்சையம்மாள் தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் ஆபீசில் தற்கொலைக்கு முயன்றார்.
ஓசூர் அருகே சின்ன சந்திர கிராமம் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவரது கணவர் மாதேஷ் . ஆனால் மாதேஷ் பச்சையம்மாளுடன் சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டே போய்விட்டார்.

7 மாதங்களாக பச்சையம்மாள்தான் குழந்தைகளை கவனித்து வருகிறார். ஆனால் மாதேஷ் நிறைய கடன்களை வெளியில் வாங்கிவிட்டு எங்கோ தலைமறைவாக உள்ளார். இதனால் மாதேஷுக்கு கடன் கொடுத்தவர்கள், பச்சையம்மாளை பணத்தை திருப்பி தரும்படி தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பச்சையம்மாள் தனது இரு பிள்ளைகளை அழைத்துச் சென்று கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸ்-க்கு வந்தார். திடுதிப்பென கையில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை குழந்தைகள் மீதுஊற்றிவிட்டு, பின்னர் தன் மீதும் ஊற்றி கொண்டார்.
இதையடுத்து, அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் ஓடிவந்து பச்சையம்மாளின் தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர். அவர் மீதும், குழந்தைகள் மீதும் தண்ணீரை கொண்டு வந்து ஊற்றினர்.
அப்போது பச்சையம்மாள் போலீசாரிடம் "முன்னாடியே ஓசூர் ஸ்டேஷனில் கேஸ் குடுத்தேனே.. ஏன் யாருமே எடுக்கலை.. கடனை தீர்க்க என்கிட்ட வருமானம் இல்லையே.. கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்கிறாங்களே.. எப்படி தருவேன்" என்று கதறினார். பின்னர் அதிகாரிகள், இது சம்பந்தமான நடவடிக்கை எடுப்பதாக பச்சையம்மாளுக்கு உறுதி கூறி அனுப்பி வைத்தனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications