உடலுறவு.. ஜெயிலில் அத்துமீறிய பெண் அதிகாரிகள்.. 'ஆபத்தான' கைதிகளுடன் ஆபாசம்.. கடைசியில் நேர்ந்த கதி
இங்கிலாந்தில் கைதிகளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக சிறைச்சாலை பெண் அதிகாரிகள் மீது நடவடிக்கை
லண்டன்: இங்கிலாந்தில் 'கொடூரமான' கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறை ஒன்றில் பாதுகாப்பு பணிக்காக இருந்த பெண் அதிகாரிகள் சிறை கைதிகளுடன் செக்ஸ் வைத்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்றத்தாழ்வான சமூகத்தில் குற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. இருப்பினும், குற்றவாளிகளின் மனநிலையை சரி செய்ய சிறைச்சாலை ஒரு வாய்ப்பாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு குற்றம் செய்யும் மனநிலையிலிருந்து வெளிவர வேண்டும் என சட்டம் வலியுறுத்கிறது. பல நாடுகளில் சிறைச்சாலைகள் மிகவும் கொடூரமானதாக இருக்கிறது. சொல்லப்போனால் ஏதோ தெரியாமல் செய்த தவறுக்காக சிறைக்கு செல்லும் நபர்கள், அங்கு கிடைக்கும் தொடர்புகளை கொண்டுதான் மிகப்பெரிய கிரிமினலாக உருவெடுக்கிறார்கள் என்கிறது ஆய்வுகள்.
எனவே சிறைச்சாலைகளை சரியா பராமரிக்க வேண்டும். இங்குள்ள குற்றவாளிகள் மனம் திரும்ப வேண்டுமெனில் இந்த உலகத்தை சரியாக அவர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்கள் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றனர். இந்த கருத்துக்களை மனதில்கொண்டு இங்கிலாந்து அரசு சிறைச்சாலைகளை முற்றிலுமாக மாற்றி அமைத்திருக்கிறது.

புதுப்பொலிவுடன் சிறைச்சாலை
அதாவது சிறைச்சாலையில் நூலகம், பெரிய விளையாட்டு மைதானம், தனி நபர்கள் கணினி பயன்படுத்தும் வசதி போன்ற அம்சங்கள் HMP Berwyn சிறைச்சாலையில் செய்யப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே சிறப்பான ஒரு விஷயம் என மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றிருக்கும் வேளையில் சிலர் இது ஆடம்பர செலவு என்று விமர்சித்துள்ளனர். சிறைவாசிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் தவறு செய்ய துணிய மாட்டார்கள். எனவே இதுபோன்ற ஆடம்பர செலவுகளை குறைத்துவிட்டு அவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்க என்ன வழி இருக்கிறது என்பதை பாருங்கள் என்று அட்வைஸ் செய்து வருகின்றனர்.

செக்ஸ்
இப்படி இருக்கையில்தான் HMP Berwyn சிறைச்சாலையில் சில அட்டூழியங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. அதாவது இந்த சிறையில் மேற்குறிப்பிட்டதைப்போல பல ஆபத்தான குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு சதி செயல்களை செய்தவர்களாகவும், அதை செய்ய திட்டம் போட்டு கொடுத்தவர்களாகவும் இருக்கிறார்கள். இப்படி இருக்கையில், இவர் மனம் திருந்த கொடுக்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி சிறைச்சாலையில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள பெண் அதிகாரிகளிடம் ரொமான்ஸில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சிறை நிர்வாகம் கூறுகையில், "எங்கள் அதிகாரிகள் இரவும் பகலுமாக காவல்துறையின் பெயரை காப்பாற்ற உழைக்கிறார்கள்.

நடவடிக்கை
ஆனால், ஒரு சில அதிகாரிகளின் நடத்தையினால் தற்போது ஒட்டுமொத்த சிறைத்துறை நிர்வாகத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிறைச்சாலையில் உள்ள ஆபத்தான் கைதிகளுடன் இந்த ஒரு சில அதிகாரிகள் பாலியில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் செக்ஸ் வைத்திருக்கிறார்கள். இது அனைத்துமே சிறைச்சாலையிலேயே நடந்துள்ளது. இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 பெண் அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வெறுமென பாலியல் குற்றங்களில் மட்டுமல்லாது சிறைச்சாலைக்குள் சட்டவிரோதமாக பொருட்களை கடத்தவும் துணை போயுள்ளனர்.

செலவு
இச்சிறைசாலையில் குற்றம் செய்த மொத்த அதிகாரிகளையும் நாங்கள் களையெடுத்துள்ளோம். மீதமுள்ள அதிகாரிகளுக்கு இது போன்ற குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்" என்று கூறியுள்ளனர். சிறை கைதிகளை குற்ற மனநிலையிலிருந்து மீட்டெடுக்க இந்த சிறைச்சாலைக்கு மட்டும் இங்கிலாந்து அரசு சுமார் 24 ஆயிரம் கோடியை இதுவரை செலவு செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications