யாரு இவங்க? 2 உலக போர்.. 22 பிரதமர்களை பார்த்தாச்சாமே! 106 ஆண்டாய் ஒரே வீட்டில் வாழும் அதிசய பாட்டி!
லண்டன்: பிரிட்டனில் ஒரே வீட்டில் 105 வரும் வாழ்ந்து வரும் மூதாட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அவர் பிறந்ததிலிருந்து ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்.
இந்த உலகம் விசித்திரமானது. இந்த விசித்திரமான உலகில் உயிர்கள் பிழைத்திருக்க புலம் பெயர வேண்டியது அவசியமாகும். பறவைகள் தொடங்கி மனிதர்கள் வரை இந்த புலம் பெயர்தல் நடக்கிறது. ஆனால், இப்படி பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உலகில் புலம் பெயராத, பிறந்தது முதல் ஒரே இடத்தில் ஒருவர் தங்கி இருக்கிறார் என்று சொன்னால் அதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் நிஜமும் கூட. பிரிட்டனில் 105 வயது மதிக்கத்தக்க பாட்டி ஒருவர் தான் பிறந்தது முதல் ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்.

எல்சி ஆல்காக் எனும் இந்த பாட்டி நாட்டிங்ஹாம்ஷையரில் உள்ள ஹுத்வைட்டில் உள்ள ஓர் வீட்டில் பிறந்திருக்கிறார். தொடக்கத்தில் இந்த இடத்தில் வாடகைக்கு இருந்த அவரது குடும்பம் பின்னர் இதனை சொந்தமாக வாங்கியது. இவர்கள் வாங்கும் போது இந்த வீட்டின் மதிப்பு வெறும் ரூ.26 ஆயிரம்தான். அப்புறம் என்ன ஒரே ஜாலிதான். வீட்டில் தனக்கு பிடித்தமான ரூமை தேர்ந்தெடுத்துக்கொண்டு அதில் தனக்கு பிடித்த பொருட்களை சேகரித்து வைக்க தொடங்கியுள்ளார்.
திருமணம், குழந்தைகள் என அனைத்தும் இதே வீட்டில் இருந்தபடி நடந்திருக்கிறது. காலம் எவ்வளவு வேகமாக நகர்ந்தாலும், எல்சி மட்டும் இந்த வீட்டின் மீதான பிடியை கொஞ்சம் கூட தளரவிடவில்லை. வீடு எவ்வளவோ மாற்றங்களை கண்டுவிட்டது. ஆனால் பாட்டி விட்டுக்கொடுக்கவில்லை. கணவர் இறந்துவிட்டார். ஒரு கட்டத்தில் தாய் தந்தையும் இறந்துவிட்டனர். மறுபுறம் மகன்களோ வீட்டை விற்றுவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் பாட்டி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இதே வீட்டில் இவர் இரண்டு உலகப் போர்கள், 22 பிரிட்டிஷ் பிரதமர்கள் என அனைத்தையும் பார்த்திருக்கிறார். தற்போது தனது 76 வயது மகன் ரேமனோடு வசித்து வருகிறார். இது குறித்து ரேமன்ட் கூறுகையில், "அம்மாவுக்கு வயதுதான் 105, ஆனால் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். வீடு முழுவதும் பம்பரமாக சுற்றுகிறார். அவருக்கு எந்த பொருள் எங்கே வைத்தோம் என்று சரியாக தெரியும். அந்த அளவுக்கு அபாரமான நினைவு திறன்" என்று கூறியுள்ளார்.
தற்போது இந்த பாட்டியின் வீடு சோஷியல் மீடியாக்களில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் இந்த வீட்டையும், பாட்டியையும் வந்து பார்த்து செல்கின்றனர். நீங்களும் பிரிட்டன் போனால் ஒரு போய் பார்த்துவிட்டு ஹாய் சொல்விட்டு வாருங்களேன்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications