பிரிட்டன் பிரதமர் பதவி.. போரிஸ் ஜான்சன் - ஜெர்மி ஹன்ட் இடையே கடும் போட்டி.. நாளை வெளியாகும் முடிவு
லண்டன்: பிரிட்டனின் புதிய ஆளுங்கட்சி தலைவர் மற்றும் அடுத்த பிரதமர் யார் என்பது நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை பிரிட்டன் எம்பி-க்கள் ஏற்க மறுத்து விட்டதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து தெரசாமே கடந்த ஜூன் மாதம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இதனையடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவர் மற்றும் பிரிட்டன் பிரதமரை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. கன்சர்வேட்டிவ் கட்சியை பொறுத்த வரை கட்சி தலைவர் பதவியை அலங்கரிப்பவரே, நாட்டின் பிரதமர் நாற்காலியிலும் அமர வைக்கப்படுவார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் தேர்வு செய்யப்பட்ட பின்னர், தெரசாமே பக்கிங்ஹாம் அரண்மனைக்கு சென்று முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் அளிக்க உள்ளார்.
இந்நிலையில் ஆளும் கட்சி தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளுக்கு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் மற்றும் வெளியுறவு துறை உயரதிகாரி ஜெர்மி ஹன்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது,
ஏற்கனவே ஆளும் கட்சியை சேர்ந்த உயர்மட்ட குழு உறுப்பினர்கள் 1,60,000 பேர் தங்களது வாக்குகள் பதிவு செய்துவிட்ட நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனிடையே போரிஸ் ஜான்சன் தலைமை பண்புமிக்கவர் என சகபோட்டியாளர் ஜெர்மி ஹன்ட் புகழ்ந்துள்ளார். போரிஸ் திறமை மிக்கவர் அவரது தலைமை மூலமாக பல்வேறு வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன. கட்சி மற்றும் ஆட்சியில் பல முக்கிய திட்டங்களை முன்னெடுத்து சென்றதில் அவருக்கு முக்கிய பங்குண்டு என்றார் ஜெர்மி.
போரிஸ் ஜான்சன் - ஜெர்மி ஹன்ட் இருவரில் யார் பிரிட்டன் பிரதமர் என்ற கேள்விக்கு நாளை விடை கிடைத்து விடும்,
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications