70 ஆண்டுக்கு பின் கோலாகலம்.. பிரிட்டன் மன்னராக இன்று முடிசூட்டும் 3ம் சார்லஸ்.. லண்டனில் பிரமாண்டம்
லண்டன்: பிரிட்டன் ராணியாக இருந்த 2ம் எலிசபெத் கடந்த ஆண்டு காலமானார். இதையடுத்து பிரிட்டன் மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மகன் 3ம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடிசூட்டி கொள்கிறார். இதனால் லண்டன் விழாக்கோலம் பூண்ட நிலையில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு முடிசூட்டும் விழா தொடங்கியது.
பிரிட்டன் மகாராணியாக 70 ஆண்டுகள் செயல்பட்டவர் 2ம் எலிசபெத். இவர் 1952ம் ஆண்டில் தனது 21வயது வயதில் அரியனை ஏறி மகாராணியாக முடிசூடினார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் அவர் கடந்த ஆண்டு மறைந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 96.

இதையடுத்து ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான 3ம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் உடனடியாக அவரது முடிசூட்டும் விழா நடைபெறவில்லை. இதையடுத்து மே மாதம் 7 ம் தேதி (அதாவது இன்று) பிரிட்டன் மன்னராக சார்லஸ் முடிசூட்டும் விழாவுக்கு தேதி குறிக்கப்பட்டது.
இந்த விழா மிகவும் கோலாகலமாக நடத்த திட்டமிடப்பட்டது. உலக நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இன்று பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸ் முடிசூட்டி கொள்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
முடிசூட்டு விழாவானது பிரிட்டனின் உள்ளூர் நேரப்படி காலை 11 மணிக்கு (இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு) துவங்கியது. விழாவுக்காக பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை மன்னர் சார்லசும், அவரது மனைவியும் ராணி கமிலாவும் சாரட் வண்டியில் ஊர்வலமாக புறப்பட்டனர். இதையடுத்து பாரம்பரிய முறைப்படி அவர் மன்னராக முடிசூட உள்ளார்.

அதாவது 700 ஆண்டு கால பழமை வாய்ந்த இருக்கையின் பின்னால் நின்று கொண்டு, கேன்டர்பரி ஆர்ச்பிஷப் பிரிட்டன் மன்னராக 3ம் சார்லஸை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிடுவார். அதன்பிறகு அவர் உறுதிமொழி எடுத்து மன்னர் இருக்கையில் அமரவைக்கப்பட்டு மன்னர் உடையணிவார். இதேபோல் அரசரின் மனைவி கமீலாவுக்கும் சடங்குகள் நடத்தப்பட்டு, அவரது தலையிலும் கிரீடம் சூட்டப்பட்டு பிரிட்டன் ராணியாக ஏற்கப்படுவார்.
இந்த விழாவில் இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பங்கேற்க உள்ளார். இதேபோல் அமெரிக்கா அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் உள்பட ஏராளமான வெளிநாட்டு தலைவர்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications