ஐரோப்பாவில் தொடங்கியது அடுத்த அலை? காரணம் டெல்டா கொரோனா.. உலக சுகாதார மையம் புதிய எச்சரிக்கை
லண்டன்: சில மாதங்களாக ஐரோப்பாவில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, கடந்த வாரம் மீண்டும் அதிகரித்துள்ளது. மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒழுக்கமாக இருக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் ஒரு புதிய அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகில் எந்த நாடும் இதுவரை கொரோனாவை முழுமையாக ஒழிக்கவில்லை. சில நாடுகள் மட்டுமே தீவிரமான கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்துள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக மக்கள் பின்பற்றவில்லை என்றால் என்ன மாதிரியான ஆபத்துகள் ஏற்படும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்துத் தான் வருகிறோம்.

ஐரோப்பிய நாடுகள்
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, ஜெர்மனி தொடங்கி ஸ்பெயின், டென்மார்க், பிரிட்டன் என அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மோசமாக இருந்தது. அதன் பின்னர் அமல்படுத்தப்பட்ட தீவிர கட்டுப்பாடுகள் காரணமாக வைரஸ் பாதிப்பு பெரியளவில் அதிகரிக்கவில்லை. இடையில் ஆல்பா உருமாறிய கொரோனா பாதிப்பு காரணமாக வைரஸ் பாதிப்பு சற்றே அதிகரித்தது. இருப்பினும், கையை மீறிச் செல்லவில்லை.

மீண்டும் அதிகரிப்பு
இந்நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் மட்டும் வைரஸ் பாதிப்பு 10% வரை அதிகரித்துள்ளது. போக்குவரத்து உள்ளிட்ட சில தளர்வுகளும் கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றாமல் இருப்பதும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்
மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஒழுக்கமாக இருக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளில் ஒரு புதிய அலை உருவாகும் ஆபத்து உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார், டெல்டா கொரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், வரும் காலங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி
மிகவும் குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால், அது கொரோனா அடுத்த அலையை ஒட்டுமொத்தமாகத் தடுக்காது என்றும் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்தார். டெல்டா கொரோனா வைரஸ் தற்போது 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக வேக்சின் தடுப்பாற்றல் குறைகிறது என்றாலும்கூட அது உயிரிழப்பைத் தடுக்கிறது. எனவே குறைந்தது 80% மக்களுக்கு மிக விரைவாக இரண்டு டோஸ் தடுப்பூசியைப் போட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
“பிளான் எங்கே..?” ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க நேட்டோ நாடுகளை நச்சரிக்கும் டிரம்ப்! -
டிரம்ப்-ன் அடுத்த டார்கெட்.. மீண்டும் கிரீன்லாந்து.. NATO நாடுகளை மிரட்டும் அமெரிக்கா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்!












Click it and Unblock the Notifications