சரமாரி கத்திக் குத்து.. 3 பேர் பலி, 6 பேர் படுகாயம்.. நடுங்கிப்போன ஸ்காட்லாந்து.. தீவிரவாதி கைவரிசை?
லண்டன்: ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். போலீஸ்காரர் உட்பபட 6 பேர் காயமடைந்துள்ளனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்குமோ என்ற அச்சத்தின் காரணமாக அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.
காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 6 பேரும் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும், ஆனால், உயிருக்கு ஆபத்தில்லை என்றும், ஸ்காட்லாந்து காவல்துறை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கிளாஸ்கோ நகரின் பார்க் இன் என்ற ஹோட்டல் பகுதியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும் காவல்துறையினர் அங்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அடைக்கலம்
பார்க் இன் ஹோட்டல் தற்போது பிற நாடுகளிலிருந்து ஸ்காட்லாந்துக்கு அடைக்கலம் தேடி வருவோருக்கு தங்குமிடம் வசதி அளிக்க கூடிய பகுதியாக இருக்கிறது. இதன் வரவேற்பறை பகுதியில்தான் இந்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

கத்திக் குத்து
சம்பவ இடத்தில் இருந்த ஜான் என்பவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வரவேற்பறை பகுதியில், ரத்த துளிகள் சிந்தி கிடந்தன. அங்கு ஒருவர் கத்திக்குத்துப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். நான் ஓடிச்சென்று அமைதியாக இருக்கவும், பதட்டப்பட வேண்டாம் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன். இதேபோன்று கத்திக்குத்துக்கு உள்ளாகிய இன்னொருவரையும் நான் பார்க்க நேரிட்டது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆப்பிரிக்க நாட்டினர்
கிரேக் மில்ராய் என்பவர் கூறுகையில், நான் இந்த ஹோட்டல் அருகே உள்ள அலுவலகத்தில் இருந்தேன். நான்கு பேர் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதை பார்த்தேன். ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த ஒருவர் தரையில் விழுந்து கிடந்ததை பார்க்க நேரிட்டது. அவர் கத்திக் குத்தாலா, அல்லது துப்பாக்கி சூட்டால் விழுந்துகிடந்தாரா என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சுட்டு வீழ்த்தினர்
கத்திக் குத்து நடத்திய நபரை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதில் அவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலின் பின்னணி என்ன? தீவிரவாத தாக்குதலா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது பற்றி விசாரணை தொடங்கியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications