Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாடகை வீட்டுக்கு வரிசையில் நிற்கும் இங்கிலாந்து மக்கள்.. திணறும் பொருளாதாரம்! ஷாக் ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் வாடகைக்கு வீடு கிடைப்பது சவாலான விஷயமாக இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டில் வாடகை வீடு தேடுபவரின் எண்ணிக்கை 6ஆக இருந்த நிலையில் இன்று இது 30ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தின் பொருளாதாரம் தலைகீழாக மாறி வருகிறது. அடிப்படை பொருட்களின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேபோல வங்கிகளில் வீட்டு கடன் வட்டி உயர்ந்துள்ளது. இதன் காரணமாக கடன் வாங்கி வீடு கட்டியவர்கள் மீண்டும் அக்கடனை அடைக்க முடியாத நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். இதன் காரணமாக தாங்கள் வாங்கிய வீடுகளை விற்கும் இடத்திற்கு வந்திருக்கின்றனர்.

Increase in the number of people looking for a house to rent in the UK

எனவே சொந்த வீட்டை காலி செய்துவிட்டு வாடகை வீடுகளுக்கு குடிபெயர தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது குறித்து புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள ஆய்வு நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை 6ஆக இருந்தது. ஆனால், தற்போது இது 30ஆக உயர்ந்திருக்கிறது என்று கூறியுள்ளது. மட்டுமல்லாது வாடகை வீட்டை பார்க்க வரிசையில் நின்று வருகிறார்கள் என்று கூறியுள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வீட்டின் வாடகையை உயர்த்தி வருகின்றனர். குறிப்பாக வடமேற்கு பகுதியில் வாடகை தாறுமாறாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உள்ளூர் மக்கள் கூறுகையில், சிங்கிள் பெட்ரூம் உள்ள வீடு ரூ.2.30 லட்சத்திற்கு வாடகை விடப்படுகிறது. இது ரொம்ப அநியாயம். கடந்த சில நாட்களுடன் இதை ஒப்பிடும்போது இது ரூ.30 ஆயிரம் அதிகம். எங்கள் சம்பளத்தில் பாதி இந்த வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது" என்று கூறியுள்ளனர்.

பிரிட்டனில் 7 பேரில் ஒருவருக்கு ஒவ்வொரு நாளும் 2 வேளை உணவுதான் கிடைக்கிறது. 40 சதவிகித மக்கள் உணவுக்காக செலவழிக்கும் தொகையை கன்ட்ரோல் செய்துக்கொண்டுள்ளனர். அதேபோல 50 சதகிவிதம் பேர் மின் கட்டணத்தை குறைக்க வெந்நீரில் குளிப்பதை தவிர்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு அந்நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிந்திருக்கிறது. தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு பக்கம் பணக்காரர்கள் அதிக சொத்தை சுரண்டி சேர்த்து வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

Increase in the number of people looking for a house to rent in the UK

இதற்கு ஆட்சியில் இருந்த அனைவரும் உதவியுள்ளனர். அதேபோல மறுபுறம் தொழிலாளர்களின் ஓய்வூதியம், சமூக பாதுகாப்பான வேலை போன்றவற்றில் பிரிட்டன் அரசு கை வைத்திருக்கிறது. இதனால் போராட்டங்கள் வெடித்துள்ளன. எனவே ஒவ்வொரு பிரதமராக ராஜினாமா செய்து வருகின்றனர். இந்த பிரச்னையை தீர்க்க நாட்டின் கோடீஸ்வரர்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் என்று தொழிலாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு வரி மூலம் கிடைக்கும் வருவாய் சாமானிய மக்களின் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

எப்படி இருப்பினும் ரிஷி சுனக் தலைமையிலான அரசு இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாது. எனவே தற்போதைய நெருக்கடி மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். ஏற்கெனவே இந்தியாவை விட பிரிட்டன் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+