முந்திக் கொண்ட ஆக்ஸ்போர்டு... இன்று கொரோனா தடுப்பு மருந்து அறிவிப்பா?
லண்டன்: அமெரிக்காவின் மொடேர்னாவைத் தொடர்ந்து பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கான பரிசோதனையின் இறுதிக் கட்டத்தை முடித்துள்ளதாகவும் இன்று அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
Recommended Video
அமெரிக்காவில் இருக்கும் மொடேர்னா நிறுவனம்தான் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முதல் ஆய்வில் இறங்கியது. இதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த ஆய்வில் இறங்கின. RNA-1273 என்ற பெயரில் மார்ச் 16ஆம் தேதி பரிசோதனை மேற்கொண்டது. மரபணு முறையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித செல்களுக்கு புரோட்டீன் செலுத்தி, வைரஸை எதிர்க்கும் முறையில் இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த ஜூலை 27ஆம் தேதி துவங்கியது.

இதையடுத்து பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச மருந்து தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து ChAdOx1 nCoV-19 என்று தடுப்பு மருந்து ஆய்வில் இறங்கியது. இந்த தடுப்பு மருந்து புரோட்டீன் அடிப்படையில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்ட ஆய்வு முடிவு இன்னும் வெளிவரவில்லை. இந்த ஆய்வில் மூன்று கட்டங்களாக ஆய்வு செய்யப்படுகிறது. முதலில் பொதுவான பாதகங்களை உருவாக்கும் எதிர்திறன், நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் திறன், மூன்றாவது பாதுகாப்பு.
இந்த ஆய்வில் 15 பேருக்கு முதல் கட்டமாக 25 மைக்ரோகிராம் மருந்தும், அடுத்த 15 பேருக்கு 100 மைக்ரோகிராம் மருந்தும், அடுத்த 15 பேருக்கு 250 மைக்ரோகிராம் மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகளில் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.
இதில் 250 மைக்ரோகிராம் ஆய்வில் நல்ல எதிர்ப்பு திறன் கிடைத்துள்ளது. மூன்றாம் கட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு 100 மைக்ரோகிராம் மருந்தும் செலுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. இந்த பரிசோதனை ஆய்வில் பங்கேற்றவர்களில் பாதிப்பேருக்கு சிறிய அளவில் தலைசுற்றல், உடலில் குளிர்ச்சி, தலைவலி, ஊசி போட்ட இடத்தில் வலி ஆகியவை இருந்துள்ளது.
இந்த ஆய்வுகள் இறுதி கட்டத்தில் இருப்பதால், விரைவில் சாதகமான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று ஐடிவி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்டத்தில், பெரியவர்களுக்கு இந்த மருந்து எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கிறது, பெரிய மக்கள் தொகைக்கு இந்த மருந்தை செலுத்துவதால், பாதிப்பு இருக்குமா ஆகிய ஆய்வுகளில் தற்போது ஆக்ஸ்போர்டு ஈடுபட்டுள்ளது. இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால் எத்தனை நாட்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு முன்னதாக சீனாவின் சைனோவேக் நிறுவனம் பிரேசில் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு ஊசி கண்டுபிடித்துள்ளது. இதன் மூன்றாம் கட்ட சோதனையும் முடிந்து நடப்பாண்டின் இறுதியில் மனிதர்களுக்கு போடப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, சீனா மற்றும் பிரேசிலில் இருக்கும் 400 ராணுவ வீரர்களுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டு கட்ட சோதனைகளில் எந்த பாதகமும் பரிசோதனையில் கலந்து கொண்டவர்களுக்கு ஏற்படவில்லை என்று பிரேசில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில்தான் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு நிறுவனம் இன்று தடுப்பு மருந்து தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் தனது ட்விட்டர் பதிவில் ''கிரேட் நியூஸ் ஆன் வேக்சின்'' என்று பதிவிட்டு இருந்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications