கொரோனாவை தடுக்க ஒரு டோஸ் போதும்.. ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன்.. முக்கியமானது ஏன்
லண்டன்: கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தும் வகையில் ஜான்சன் & ஜான்சன் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து இதுவரை எந்த நாடும் முழுமையாக மீளவில்லை. இதிலிருந்து தப்பிக்கத் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.

பிரிட்டன்
குறிப்பாக, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே தடுப்பூசி பணிகளை முதலில் தொடங்கிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையானது. அங்குத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள இதுவரை பைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Array
இந்நிலையில் நான்காவது தடுப்பூசியாக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்குப் பிரிட்டன் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் அரசு இதுவரை 2 கோடி ஜான்சன் தடுப்பூசிக்கு ஆர்டர் அளித்துள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவல் பற்றிய அச்சம் பிரிட்டனில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது 4ஆவது தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியமானது
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி சிங்கிள் டோஸ் தடுப்பூசியாகும். அதாவது, பைசர் மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலஇடைவெளியில் 2 டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். ஆனால் ஜான்சன் தடுப்பூசி ஒரு டோஸ் அளித்தால் போதும். இதன் மூலம் அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி அளிக்க முடியும். மேலும், ஊசிகள், சிரஞ்சுகள் போன்ற மருத்துவ கழிவுகளும் குறையும். ஜான்சன் தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை 72% வரை குறைப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி பணிகள்
பிரிட்டன் நாட்டில் இதுவரை 6.2 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளே அங்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி பணிகள் மூலம் பிரிட்டன் நாட்டில் சுமார் 13 ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
-
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்?












Click it and Unblock the Notifications