கொரோனாவை தடுக்க ஒரு டோஸ் போதும்.. ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த பிரிட்டன்.. முக்கியமானது ஏன்
லண்டன்: கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தும் வகையில் ஜான்சன் & ஜான்சன் சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்குப் பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரசின் கோரப்பிடியில் இருந்து இதுவரை எந்த நாடும் முழுமையாக மீளவில்லை. இதிலிருந்து தப்பிக்கத் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் விரைவாக மேற்கொண்டு வருகிறது.

பிரிட்டன்
குறிப்பாக, பிரிட்டன் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே தடுப்பூசி பணிகளை முதலில் தொடங்கிய நாடுகளில் பிரிட்டன் முதன்மையானது. அங்குத் தடுப்பூசி பணிகளை மேற்கொள்ள இதுவரை பைசர், அஸ்ட்ராஜெனெகா, மாடர்னா ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Array
இந்நிலையில் நான்காவது தடுப்பூசியாக அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்குப் பிரிட்டன் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. பிரிட்டன் அரசு இதுவரை 2 கோடி ஜான்சன் தடுப்பூசிக்கு ஆர்டர் அளித்துள்ளது. இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவல் பற்றிய அச்சம் பிரிட்டனில் அதிகரித்துள்ள நிலையில், தற்போது 4ஆவது தடுப்பூசிக்கு அந்நாடு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏன் முக்கியமானது
ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி சிங்கிள் டோஸ் தடுப்பூசியாகும். அதாவது, பைசர் மாடர்னா, அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை குறிப்பிட்ட காலஇடைவெளியில் 2 டோஸ்களாக அளிக்கப்பட வேண்டும். ஆனால் ஜான்சன் தடுப்பூசி ஒரு டோஸ் அளித்தால் போதும். இதன் மூலம் அதிகப்படியான மக்களுக்குத் தடுப்பூசி அளிக்க முடியும். மேலும், ஊசிகள், சிரஞ்சுகள் போன்ற மருத்துவ கழிவுகளும் குறையும். ஜான்சன் தடுப்பூசி தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதை 72% வரை குறைப்பது சோதனைகளில் தெரியவந்துள்ளது.

தடுப்பூசி பணிகள்
பிரிட்டன் நாட்டில் இதுவரை 6.2 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளே அங்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி பணிகள் மூலம் பிரிட்டன் நாட்டில் சுமார் 13 ஆயிரம் பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications