Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று தேர்தல்.. ஆனா ரிஷி சுனக்கால் பிரதமர் பதவி மட்டுமின்றி.. எம்பி பதவியை கூட தக்கவைக்க முடியாதாம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில், ரிஷி சுனக் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் கடந்த 2015ம் ஆண்டு முதலே ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் எம்பியாக இருக்கும் நிலையில், அந்த தொகுதியைக் கூட அவரால் தக்க வைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரிட்டன் நாட்டில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு கன்சர்வேடிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

Britain world Rishi Sunak

தேர்தல்: இதற்கிடையே இந்த பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ரிஷி சுனக் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். அங்குக் கடந்த 2019இல் நடந்த தேர்தலில் ரிஷி சுனக் 63% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். கடந்த 2015ம் ஆண்டு முதலே ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் ரிஷி சுனக் தான் எம்பியாக இருந்து வருகிறார்.

ஆனால், இந்த முறை ரிஷி சுனக் இந்த தொகுதியிலேயே தோல்வி அடையும் சூழல் உருவாகியுள்ளது. சமீபத்தில் நடந்த சர்வே முடிவுகளில் கூட ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்றே கூறப்பட்டுள்ளது. அங்கு ரிஷி சுனக்கிற்கு 50% வாக்குகளும், தொழிலாளர் கட்சிக்கு 47% வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு மிகக் கடுமையான போட்டி இருக்கும் என்பதையே இது காட்டுகிறது.

ரிஷி சுனக் படுதோல்வி: ரிஷி சுனக் தனது எம்பி தொகுதியைத் தக்க வைக்க முடியாமல் போனால் அது அவருக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே இருக்கும். ஏனென்றால், பிரிட்டன் வரலாற்றில் இதுவரை பிரதமர் ஒருவர் தனது எம்பி சீட்டில் தோல்வி அடைந்ததே இல்லை. எனவே, இந்த முறை அங்கு ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதி முடிவுகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக கடந்த மாதம் அங்கு Savanta and Electoral Calculus என்ற அமைப்பின் பிரம்மாண்ட சர்வே முடிவுகள் வெளியானது. அங்குள்ள 516 இடங்களில் தொழிலாளர் கட்சி 382இல் வென்று ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது. அதாவது சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனில் தொழிலாளர் கட்சி ஆட்சியை அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 53 சீட்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. நவீன பிரிட்டன் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சிக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வியாக இது இருக்கும்.

என்ன காரணம்: குறிப்பாக ரிஷி சுனக் தனது எம்பி பதவியை இழக்கக்கூடும் எனக் கூறப்பட்டு இருந்தது. ரிஷி சுனக் போட்டியிடும் ரிச்மண்ட் மற்றும் நார்தாலர்டன் தொகுதியில் இந்துக்கள் மக்கள் தொகை பெரியளவில் இல்லை. அங்கு வெள்ளை இன மக்களே அதிகமாக உள்ளனர். கடந்த 2015இல் ரிஷி சுனக் முதலில் போட்டியிட்ட போது அங்கு எம்பியாக இருந்த கன்சர்வேடிவ் கட்சி எம்பி ஆதரவு முழுமையாக ரிஷி சுனக்கிற்கு இருந்தது.

உறுதி: இதன் காரணமாகவே அங்கிருந்த வெள்ளை இன மக்கள் ரிஷி சுனக்கிற்கு வாக்களித்தனர். இருப்பினும், இந்த முறை மோசமான பொருளாதார சூழல் காரணமாக அவர்கள் அரசுக்கு எதிரான மனநிலையில் இருப்பதாகவே தெரிகிறது. வெள்ளை இன மக்களும் பாரம்பரியமாகவே கன்சர்வேடிவ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர். ஆனால், இந்த முறை அதிருப்தி அதிகமாக இருப்பதால் அவர்கள் தொழிலாளர் கட்சி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதனால் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+