விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த தடை - பிரிட்டன் நீதிமன்றம் அதிரடி
லண்டன்: விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கத் தடை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உலக வல்லரசான அமெரிக்கா உள்ளிட்ட பல முக்கிய நாடுகளின் போர் குற்றங்கள், உலக மக்கள் மீது ஏவும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் என அரசின் பல பாதுகாக்கப்பட்ட மற்றும் முக்கியமான ஆவணங்களைத் தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டார்.
கொடூரமான குவாண்டனமோ பே' சிறைச்சாலை முதல் ஈராக்கில் அமெரிக்காவின் போர் குற்றங்கள் வரை பல முக்கிய குற்றச்சாட்டுகளை இவர் ஆதாரங்களுடன் வெளியிட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

உதவவில்லை
அரசின் அதி முக்கிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட்டதற்காக இவர் மீத அமெரிக்காவில் பல கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டது. அசாஞ்சேவின் சொந்த நாடான ஆஸ்திரேலியா உள்ளிட எந்த நாடும் இவருக்கு உதவவில்லை.

ஈகுவடாரில் தஞ்சம், லண்டனில் சிறை
இதையடுத்து தென் அமெரிக்காவின் குட்டி தீவு நாடான ஈகுவடாரில் இவர் தஞ்சம் புகுந்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக இவர் அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் ஈகுவடார் அரசு இவருக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதன் பின் பிரிட்டன் காவல் துறை இவரைக் கைது செய்து, லண்டன் சிறையில் அடைத்தனர். ஜூலியன் அசாஞ்சே மீது தங்கள் நாட்டில் பல வழக்குகள் உள்ளதால், அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தில் அமெரிக்க வழக்கு தொடர்ந்தது.

நாடு கடத்த தடை
இந்த வழக்கை இன்று விசாரித்த மாவட்ட நீதிபதி வனேசா பாரிட்சர், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கத் தடை விதித்து தீர்ப்பளித்தார். அமெரிக்காவுக்கு அவரை நாடு கடத்த உத்தரவிடுவது, மன ரீதியாக அவருக்குப் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் தனது தீர்பில் குறிப்பிட்டார்.

ரீதியான
மேலும், அமெரிக்காவுக்கு அவர் நாடு கடத்தப்பட்டால் வெளி உலகத்துடனான அவரது தொடர்புகள் குறைக்கப்படும், மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் அவர் மீது விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்றார். இது ஒருவருக்கு இருக்கும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்று கூறிய அவர், இது ஏற்கனவே அதிகளவில் தற்கொலை எண்ணத்தைக் கொண்டிருக்கும் ஜூலியன் அசாஞ்சேவுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

அமெரிக்கா மேல் முறையீடு
இருப்பினும், பிரிட்டன் மாவட்ட நீதிபதி அளித்துள்ள இந்த தீர்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது, மேலும், 49 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை விரைவில் விசாரணை செய்யப்படவுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications