இந்துக்களே மன்னித்து விடுங்கள்.. தீபாவளிக்கு மாமிசம் - பீர் கொடுத்த பிரிட்டன் பிரதமர் வருத்தம்
லண்டன்: பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி பண்டிகை பீர் மற்றும் மாமிசம் பரிமாறப்பட்டது சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் தான் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அலுவலகம் மன்னிப்பு கோரியு்ளளது.
பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் செயல்பட்டு வருகிறார். தொழிலாளர் கட்சியை சேர்ந்த இவர் சமீபத்தில் நடந்த அந்த நாட்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரிட்டன் பிரதமாக இருந்த ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி அரியணை ஏறினார்.

பொதுவாக அமெரிக்காவை போல் பிரிட்டனிலும் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். இவர்கள் நம் நாட்டை போலவே இந்து மதத்தை பின்பற்றி வருகின்றனர். இதனால் பிரிட்டனிலும் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த மாதம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. அதேபோல் வெளிநாடுகளிலும் தீபாவளி பண்டிகை என்பது கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் தீபாவளி கொண்டாடினர். அதேபோல் பிரிட்டன் பிரதமர் அலுவலகத்தில் வைத்து அந்த நாட்டின் பிரதமர் ஸ்டார் கெய்மர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பிரிட்டன் பிரதமர் அலுவலக தீபாவளி கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது பிரதமர் ஸ்டார் கெய்மர் விளக்கேற்றி தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். இந்த விழாவுக்கு ஏராளமான இந்துக்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இந்து மதத்தை சேர்ந்த பிரிட்டன் எம்பிக்களுக்கும் பங்கேற்றனர். அப்போது விழாவில் மாமிசம் மற்றும் பீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த இந்து மத எம்பிக்கள் கவலை தெரிவித்தனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த சிவானி ராஜா எம்பி சார்பில் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில் தீபாவளி பண்டிகை என்பது பல்வேறு இந்துக்களின் பழக்க வழக்கங்களுக்கு மாறுபட்டதாக இருந்தது. இந்த ஆண்டு நடந்த தீபாவளி கொண்டாட்டம் என்பது ஏமாற்றமளிக்கும் வகையில் இருந்தது. எனது சொந்தத் தொகுதியான லெய்செஸ்டர் கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் உள்ளனர். அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக நான் வருத்தமடைகிறேன்'' என்று கூறியிருந்தார்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மவுனம் காத்து வந்தது. இந்நிலையில் தான் தற்போது பிரிட்டன் பிரதமர் அலுவலகம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில் தீபாவளி கொண்டாட்டத்தில் வினியோகம் செய்யப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் அங்கு நடந்த சம்பவம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் இனி இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்று பிரிட்டன் பிரதமர் உத்தரவாதம் அளித்து மன்னிப்பு கோரியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications