இலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை
லண்டன்: இலங்கையில் 1980களில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இலங்கையில் 1980களின் தொடக்கத்தில் சிறப்பு அதிரடிப்படையினருக்கு இங்கிலாந்தின் Keenie Meenie Services - KMS என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் பயிற்சி அளித்தது. இங்கிலாந்து கூலிப்படையினரிடம் பயிற்சி பெற்ற இலங்கை அதிரடிப்படையினர் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான புகார்கள் இங்கிலாந்தில் போர்க்குற்றங்களை விசாரிக்கும் மெட்ரோபாலிட்டன் காவல்துறைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் கடந்த சில மாதங்களாக இலங்கையில் தமிழருக்கான எதிரான போர்க்குற்றங்களில் இங்கிலாந்து கூலிப்படையினர் பங்களிப்பு தொடர்பான செய்திகள், நூல்கள், ஆவணங்கள் வெளியாகின.

இதனையடுத்து தற்போது லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். சர்ச்சைக்குரிய Keenie Meenie Services நிறுவனம் தற்போது செயல்படவில்லை. இதன் நிறுவனரான டேவிட் வாக்கர், மற்றொரு பாதுகாப்பு நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவராக உள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications