திருமணம் செய்து வையுங்க.. நேராக போலீஸ் நிலையம் சென்ற இளைஞர்.. வித்தியாச மனு! குவியும் சப்போர்ட்!
திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லை எனக்கூறி இளைஞர் ஒருவர் போலீசாரிடம் மனு மூலம் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 3 அடி உயரம் கொண்ட இளைஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் 3 அடி உயரம் கொண்ட இளைஞர் ஒருவர் ‛எனக்கு மணப்பெண் கிடைக்கவில்லை. மணப்பெண்ணை கண்டுபிடித்து திருமணத்துக்கு உதவி செய்ய வேண்டும்' என போலீசில் வித்தியாசமான மனு அளித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும் அவருக்கு பலரும் சப்போர்ட் செய்ய தொடங்கி உள்ளனர்.
திருமணம்.. ஆண் அல்லது பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்துக்கு செல்வதற்கான சுபநிகழ்ச்சி. திருமணம் என்பது ஒரு தரப்புக்கும் எளிமையானதாக இருக்கும் வேளையில் தான் மற்றொரு தரப்புக்கு கடினமான ஒன்றாக மாறி உள்ளது. அதாவது சிலருக்கு மணப்பெண், மணமகன் கிடைப்பதில் சிரமம் இருக்கும்.
இதற்கு பல்வேறு காரணங்களை கூறலாம். இந்நிலையில் தான் திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. திருமணத்துக்கு உதவி செய்ய வேண்டும் என உத்தர பிரதேச இளைஞர் ஒருவர் போலீசில் கோரிக்கை மனு அளித்துள்ளார். அதன் விபரம் வருமாறு:

3 அடி இளைஞர்
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள காடாலி பகுதியை சேர்ந்தவர் முகமது டேனிஷ் (வயது 20). 3 அடி உயரம் கொண்டவர். இவர் தனது பெற்றோர் மற்றும் 4 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். முகமது டேனிஷ் தனது தாயுடன் சேர்ந்து துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். தனக்கு ஏற்றாற்போல் மணப்பெண் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

போலீசில் கோரிக்கை மனு
இதனால் அவர் நேரடியாக காடாலி போலீஸ் நிலையம் சென்று போலீசாரிடம் ஒரு புகார் மனு ஒன்றை வழங்கினார். அதில், ‛‛எனக்கு திருமணம் செய்து கொள்ள மணப்பெண் தேடினோம். வளர்ச்சி குறைவால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மணப்பெண்ணை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் உதவி செய்ய வேண்டும்'' என கோரிக்கையாக வைத்துள்ளார்.

குவியும் சப்போர்ட்
இதுபற்றி போலீஸ்காரர் சஞ்சீவ் குமார் தலால் கூறுகையில், ‛‛இது முற்றிலும் வித்தியாசமான கோரிக்கையாக உள்ளது. இதன்மீது என்ன செய்யலாம் என்பது பற்றி அதிகாரிகளுடன் பேசி முடிவு செய்யப்படும். இதற்கிடையே முகமது டேனிஷ் போலீசில் கோரிக்கை மனு அளித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் அவருக்கு சப்போர்ட்டாக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

முன்பு நடந்தது என்ன?
முன்னதாக சாம்லி மாவட்டத்தை சேர்ந்த கைராணா பகுதியை சேர்ந்த 27 வயது நிரம்பிய அசீம் மன்சூரியும் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கபப்டடு இருந்தார். இவர் தனக்கு திருமணம் உதவி கோரி உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மற்றும் போலீசில் புகார் மனு அளித்தார். இது செய்தியாக வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28 ம் தேதி அவருக்கு திருமணம் நடந்தது. அந்த வகையில் தற்போது முகமது டேனிஷ் போலீஸ் நிலையத்தில் கோரிக்கை மனு வைத்துள்ளார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications