உன்னாவ் பாலியல் வழக்கு.. புகார் கூறிய பெண் மீது கொலை முயற்சி.. வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு!
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் உன்னாவில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வருகிறது. இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக குல்தீப் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். வரிசையாக அந்த பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் வரிசையாக மரணம் அடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர். அந்த உட்பட இரண்டு பேர் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உத்தர பிரதேச போலீஸ் இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்ற புகார் உள்ளது. இந்த நிலையில் உன்னாவில் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வாகனம் விபத்திற்கு உள்ளான வழக்கு மட்டும் தனியாக சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உன்னாவ் விபத்து படுகொலை முயற்சியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பாஜக எம்எல்ஏ குல்தீப் உட்பட 10 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் குல்தீப் தற்போது பாஜக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை அடுத்து வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications