செம்ம.. யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் வேட்பாளரை நிறுத்த அகிலேஷ் ஸ்கெட்ச்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 10-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் கோரக்பூர் நகர்புற தொகுதியில் பாஜக வேட்பாளராக முதல்வர் யோகி ஆதித்யநாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்கொள்ளும் முதல் சட்டசபை தேர்தல் இது. கோரக்பூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு பல முறை வெற்றி பெற்றவர் யோகி ஆதித்யநாத். தற்போது உ.பி. சட்ட மேலவை உறுப்பினராக இருக்கிறார்.
கோரக்பூர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து தலித்துகள் தலைவரான பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. இதனிடையே யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து சமாஜ்வாதி கட்சியின் சார்பில் பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அகிலேஷ் யாதவ் வியூகம் வகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது தொடக்கம் முதலே பிராமணர் சமூகம் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. உ.பி.யில் காங்கிரஸ் அல்லது பாஜக தேர்தலில் வென்றால் பிராமணர்களையே முதல்வராக்கப்படுவர். ஆனால் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை பாஜக முதல்வராக்கியதை பிராமணர்கள் ஏற்கவில்லை. அத்துடன் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பிராமணர்கள் ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர்; என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்கிற அதிருப்தி நீண்டகாலமாக நிலவுகிறது.
இதனால் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பிராமணர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளாராம். பாஜகவின் மாநில துணைத் தலைவராக இருந்த மறைந்த உபேந்திரா தத் சுக்லாவின் மனைவி சுபாவதி சுக்லாவை யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக அகிலேஷ் களமிறக்க வாய்ப்புள்ளதாம். சுபாவதி சுக்லாவின் 2 மகன்களும் நேற்று சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். கிழக்கு உ.பியில் உள்ள கோரக்பூர் தொகுதிக்கு மார்ச் 3-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பாஜகவின் ராதா மோகன் தாஸ் அகர்வால் சிட்டிங் எம்.எல்.ஏவாக உள்ளார். இவர் 4 முறை கோரக்பூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications