திருநங்கையுடன் லிவ்-இன் உறவு.. மகனை தாக்கிய தந்தை! போலீஸ் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு
லக்னோ: திருநங்கையுடன் லிவ்-இன் உறவில் இருக்கும் ஆணுக்கு போலீஸ் பாதுகாப்பு அளித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
சர்வதேச அளவில் ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற நாடு என்கிற பெருமையை இந்தியா கொண்டிருக்கிறது. மட்டுமல்லாது இதனை ஒவ்வொரு நாளும் நாம் நிரூபித்து வந்திருக்கிறோம். அந்த வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜனநாயகத்தின் உட்சபட்ச கூறுகளை இந்தியா கொண்டிருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

அதாவது, திருநங்கையுடன் லிவி-இன் உறவில் ஆண் ஒருவர் இருந்து வந்திருக்கிறார். ஆனால், அந்த ஆணின் பெற்றோர், குறிப்பாக அவருடைய தந்தை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது மகனை சரமாரியாக தாக்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த தாக்குதல் மகனின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது. எனவே, தனக்கு பாதுகாப்பு கோரி மகன் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
வழக்கு விசாரணை நீதிபதி சௌமித்ரா தயாள் சிங் மற்றும் நீதிபதி டொனாடி ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்திருக்கிறது. இந்த அமர்வு கொடுத்த தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.
"தனக்கு விருப்பமான நபருடன் வாழ்வது வாழ்க்கையின் ஒரு அங்கம். இதில் உள்ள தவறான எண்ணங்களை களையத்தான் நீதிமன்றங்கள், அரசியலமைப்புச் சட்டங்கள் இருக்கின்றன. மனிதர்களின் அடிப்படை அமைப்பில் இருந்து தோன்றக்கூடிய கருத்து மற்றும் ஆளுமையின் பன்முகத்தன்மை, வெவ்வேறு மனிதர்களை வெவ்வேறு தேர்வுகளை செய்ய வழிவகுக்கிறது. எனவே, சுதந்திரமான தேர்வுக்கான உரிமை என்பது சுதந்திரத்தின் ஆன்மா மற்றும் சுதந்திர சமுதாயத்தின் மிகவும் நேசத்துக்குரிய பண்பாகும்.
மனிதனாக இருப்பது என்பது உடல், உளவியல், உணர்ச்சி அல்லது வேறு எதுவாக இருந்தாலும், தனித்துவத்தை உள்ளடக்கியது மற்றும் ஊக்குவிக்கிறது. அரசியலமைப்பு ஜனநாயகம் எந்தவொரு மனித சமூகத்திலும் எழும் பல்வேறு தனித்துவத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதை உறுதியளிக்கிறது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
மேலும், "தற்போதுள்ள சட்டங்களின் எல்லைக்குள் மனிதர்கள் தங்கள் தனித்துவத்தை நிலைநிறுத்துவதைத் தடுக்கும் போது, அவன் சார்ந்திருக்கும் சமூகத்தின் சொந்த பரிணாம செயல்முறையைத் தடுக்கிறது.
இந்த பின்னணியில், வழக்கின் உண்மைகள் மற்றும் மனுதாரர்களின் குறைகளை கவனத்தில் கொண்டு, மனுதாரர்களின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை - சுதந்திரமான தேர்வு மற்றும் அவர்களின் கண்ணியத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவருக்கான பாதுகாப்பை வழங்க உத்தரவிடுகிறோம்.
அதன்படி, மனுதாரர்கள் ஒன்றாக வாழ முடிவு செய்ததால், உடல் ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ, மனுதாரர்களையோ அல்லது அவர்களது சொத்துக்களுக்கு யாரும் தீங்கு விளைவிக்கக் கூடாது. இதற்கு மாநில அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இந்த உத்தரவு மாற்று பாலினத்தவர்களை புரிந்துகொள்ளுதல் என்பதோடு மட்டுமல்லாது, மனிதர்களின் சுய தேர்வுக்கான உரிமையை நிலை நிறுத்துவதாக இருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications